- Home /
- GANGAI KONDA CHOZHAN PART 2 - கங்கை கொண்ட சோழன் - 2
- Description
-
Details
இராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரம். கங்கை கொண்ட சோழன் புதினமானது பாலகுமாரனால் எழுதப்பட்டது. இது மூன்று பாகங்களைக் கொண்டது. திருமகள் நிலையத்தாரால் வெளிடப்பட்டது. ராஜேந்திர சோழரை நாயகனாக கொண்டது.ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு மேற்கொண்ட படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள், கங்கை கொணர்ந்து மற்றும் வாணிபம் மற்றும் கலாச்சாரம் பற்றி நூல் ஆசிரியர் விரிவாகக் கூறி உள்ளார். ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது.ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.முன்னுரையிலிருந்து:உடையார் எழுதி முடித்த சில காலங்களிலேயே இதற்கான வேலையை துவங்கிவிட்டேன். பலமுறை பல ஒலிநாடாக்களில் இதைப் பதிவு செய்து அவை சரியாக வரவில்லையென்று அழித்துவிட்டேன். நாவலின் மையம் என்ன என்பது பற்றி எனக்கு ஊசலாட்டம் இருந்தது. அரிய. பெரிய தகவல்களை எனது நண்பர்கள் பெற்று கொடுத்தார்கள். மிகக் குறிப்பாக கும்பகோணத்தில் கட்டிட கலைஞராக வாழும் எனது அருமை நண்பர் சீதாராமன் எனக்கு கொடுத்த மிகப் பெரிய உற்சாகம் இந்த நாவல் வெளிவர காரணமாகிறது. அவர் ஒரு கட்டிட கலைஞர் மட்டுமல்ல. விற்பனையாளர் மட்டுமல்ல. சரித்திரத்தில் மாறா காதல் கொண்டவர். அவருக்கு சோழ தேசம் பூர்வீகம் என்பதால் சோழ தேசத்தை அணுஅணுவாக அனுபவிக்க ஆசைப்பட்டவர். தொடர்ந்து ஆசைப்படுகிறவர். சோழ தேசத்தை விட்டு நீங்கக் கூடாது என்பதாலேயே சென்னையில் பல வாய்ப்பு இருப்பினும் அவர் காவிரிக்கரை ஓரமாக மிகப் பெரிய ஒரு மாளிகை கட்டி அதில் சௌகரியமாக வாழ்ந்து வருகிறார். படுக்கை அறை கதவு திறந்தால் காவிரி கீழே புரண்டு ஓடுவதை பார்க்கலாம். பால்கனியில் நின்றாள் காவிரி எதிர்புறம் அலை அடித்துக் கொண்டு ஓடிவரும். வீட்டு வாசற்படியிலிருந்து இருபது தப்படி நடந்தால் படித்துறை வந்துவிடும். மூன்று படி இறங்கினால் காவிரி கால் தொடும். இப்படிப்பட்ட ஒரு அற்புதமான இடத்தில மிகக் கடுமையான உழைப்பின் பேரில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் எனது நண்பர் திரு.சீதாராமன் பல்வேறு விஷயங்களை இதற்காக திரட்டிக் கொடுத்தார்.எது இந்த நாவலின் மையமாக இருக்க வேண்டும் என்பது பற்றி என்னிடம் கடுமையாக விவாதித்தார்.மிக நீண்ட நாட்கள் கிட்டத்தட்ட கூட்டிப் பார்த்தால் ஒரு நூறு மணிக்கு மேற்பட்டும் அவரோடு இதுபற்றி நான் பேசியிருக்கிறேன். தாம் சேகரித்த தகவலை தான் முனைவர் பட்டம் பெறுவதற்காக, ஆராய்ச்சி பட்டம் பெறுகின்ற அந்த வேலைகளுக்கு நடுவே இராஜேந்திர சோழர் பற்றிய தகவல்களையும் விசாரித்து, சோழ தேசத்தின் மாண்புகளைச் சொல்லி சிறு சிறு கோவில்களில் உள்ள கல்வெட்டுகளையும் எனக்கு இனம் காட்டி என்னை எழுதத் தூண்டியவர் திரு.சீதாராமன் அவர்கள். அவருடைய உதவிக்கு, அன்புக்கு நான் சிரம் தாழ்ந்து வணக்கம் சொல்கிறேன்.பல தகவல்கள் கிடைத்தது.தகவல்கள் கிடைத்தால் போயிற்றா. நாவல் எழுத வேண்டாமா. இதற்குப் பிறகுதான் இருக்கிறது உண்மையான சோதனை. இவற்றை வரிசைப்படுத்தியும் ஒரு கதையை மனதுக்குள் கொண்டு வந்தும், எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தும் என்னென்ன எழுத வேண்டும் என்று ஒரு பட்டியலிட்டும் நான் பட்ட அவஸ்தைக்கு துணையாக நின்றவர்கள் திருமதி பாக்கியலக்ஷ்மி சேகர், திருமதி சௌம்யா ரவிச்சந்திரன், திருமதி ஜெயலக்ஷ்மி சூர்யபிரகாஷ். எழுதுவதற்கு முன்பு எப்படி எழுதப் போகிறேன் என்று எழுதுவதை கதையாக சொல்கிற ஒரு பழக்கம் எனக்கு உண்டு. ஒரு நாவல் எழுதுவது போல நான் மணிக்கணக்கில் ஒரு கதையைப் பற்றி அங்குலம் அங்குலமாக பேசுவேன். அதனுடைய விளக்கங்கள், வர்ணனைகள், வசனங்கள் எல்லாம் மடமடவென்று ஆற்றொழுக்காக என்னிடமிருந்து வெளிவரும். இவைகளை கேட்பதற்கு ஆளில்லாது வெறுமே சுவர் பார்த்து பேச முடியுமோ. என் பேச்சை பொறுத்துக் கேட்டு, அதற்கு எதிரொலித்து, தொடர்ந்து விளக்கம் கேட்டு இப்படி இல்லையே என்று சந்தேகம் எழுப்பி என்னோடு என்னை உற்சாகப்படுத்தியது இந்த மூன்று சினேகிதிகள்தான்.உடையாருக்கு உதவிய பல புத்தகங்களே இங்கும் உதவின. சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி எழுதுகின்ற எவரும் நீலகண்ட சாஸ்திரி அவர்களை விழுந்து வணங்காமல் நகர முடியாது. அவர் செய்த மிகப் பெரிய ஆராய்ச்சி இன்றைக்கும் நாவலாசிரியர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கிறது. அவைகளை நான் தனியே வரிசைப்படுத்தியிருக்கிறேன். ஒரே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு இம்மாதிரியான புதினங்கள் எழுத முடியாது. சரித்திர ஆராய்ச்சியாளர் புத்தகங்கள் மட்டும் போதாது. கடலும் கடல் சார்ந்த இடமும், கடல் பக்கத்தின் நீரோட்டமும், அந்த காலத்து பாய்மர கப்பலும், அது பற்றி விவரங்கள் தாங்கிய புத்தகங்களும் எனக்கு பேருதவி செய்தன.பயணப்படுவது மிகப் பெரிய சந்தோஷம். ஒரு குறிப்பிட்ட மனிதரின் சரித்திரம் தேடி, ஆயிரம் வருடத்திற்கு முன்பான தடம் தேடி பயணப்படுவது இன்னும் உற்சாகமான விஷயம். பல இடங்களில் கருங்கல்லை கட்டிக் கொண்டுதான் உட்கார்ந்து கொள்ள முடியும். உடைந்து போன தூண்களை தடவித் தான் திகைத்திருக்க முடியும்.என்றென்றும் அன்புடன்,பாலகுமாரன்சென்னை23.03.2013 - Specification
-
Specification
SKU Code TMN B 113 Weight in Kg 0.2500 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name பாலகுமாரன் Balakumaran Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம் - Reviews
Related Products
-
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Regular Price: ₹540.00
Special Price ₹500.00
-
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Regular Price: ₹425.00
Special Price ₹385.00
-
GANGAI KONDA CHOZHAN 4 - கங்கை கொண்ட சோழன் பாகம் 4
Regular Price: ₹510.00
Special Price ₹480.00