குறையொன்றுமில்லை III - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Kuraiyondrumillai III - Kurayondrumillai Volume 3 - Sri Mukkur Lakshminarasimhachariar
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
VAN B 428
₹260.00
ஆன்மீகம் நூல்.
காகித அட்டை/ பேப்பர்பேக்;
592 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: பிப்ரவரி, 2001;
இருபதாம் பதிப்பு: நவம்பர், 2020.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் குறையொன்றுமில்லை - III, முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
முன்னுரை:
"ஆஸ்திக ஸமாஜம்" என்றாலே ஈரரசு படாதபடி சென்னையில் வீனஸ் காலனியில் உள்ள "ஆஸ்திக ஸமாஜ"த்தையே குறிக்கும். கலை பல வளர்க்கும் மாபெரும் ஸ்தாபநம் அது. அதில் வருடா வருடம் உபந்யஸிக்கக் கொடுத்து வைத்தவர்களில் அடியேனும் ஒருவன். சென்ற வருடம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் திருநாமமான "விச்வம்" என்ற சொல்லின் பெருமையை விவரித்துக் கொண்டிருக்கும் பொது கல்கி வார இதழின் பதிப்பாசிரியர் உயர்திரு கி.ராஜேந்திரன் அவர்கள் நாள்தோறும் வந்து கேட்டு ஆனந்தித்தருளினார். உபந்யாசம் முழுவதும் ஒலிநாடாவில் ஏற்றப்பட்டது. கலியின் வலிமையைப் போக்கும் கல்கியில் உபந்யாஸத்தின் தொகுப்பு ஒலிநாடாவில் பதிவானதைக் கேட்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களின் அருள்வாக்கின்படி "குறையொன்றுமில்லை" என்கிற தலைப்பில் 47 வாரங்கள் தொடர்ந்து வந்தது. இதைத் தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற உயர்ந்த கருத்துடன் உயர்திரு கி.ராஜேந்திரன் அவர்களும், "வானதி பதிப்பகத்தின்" உரிமையாளர் உயர்திரு திருநாவுக்கரசு அவர்களும் கலந்தாலோசித்து அதைத் தற்போது செயல்படுத்தியிருக்கின்றனர்.
"குறையொன்றுமில்லை" படிப்பவர்க்குக் குறையொன்றுமில்லையே"
- முக்கூர் லக்ஷ்மீநரஸிம்ஹாசாரியார்.
ஆசிரியர் குறிப்பு : ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள். இந்த ஐந்து நரசிம்மர்களும் தம்மைக் காட்டிக்கொண்டது ஸ்ரீ உ.வே. முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் என்ற புகழ் பெற்ற நரசிம்ம உபாசகரிடம். இவர் உலக நன்மைக்காக நரசிம்மரின் அவதார தினமான சுவாதி நட்சத்திரங்களில் நூற்றியெட்டிற்கும் மேலான யக்ஞங்களை நடத்தியுள்ளார்.
இவற்றில் சில, பிரபல நரசிம்ம ஷேத்திரங்களான, மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம் என்ற சோளிங்கர், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், நைமிசாரண்யம், பிருந்தாவனம், ஸ்ரீ ரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் மட்டபல்லி யக்ஞ வாடிகை சந்நிதானத்தில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியாரின் நாலடி உயரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிலாரூபம். இவர் நிகழ்த்திய நூற்றியெட்டிற்கும் மேற்பட்ட சுவாதி யக்ஞங்களில், யக்ஞ மூர்த்தியாக இருந்த லஷ்மி நரசிம்மர், இன்றும் மாதந்தோறும் சுவாதித் திருமஞ்சனம் பெற்றுக்கொண்டு அழகுறக் காட்சியளிக்கிறார்.
SKU Code | VAN B 428 |
---|---|
Weight in Kg | 0.690000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹140.00
Save: 20.00 Discount: 12.50%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%