ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த கந்தரந்தாதி (உரையுடன்) - Kantharanthathi (Uraiyudan) - Kandarandhadhi
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
ஆன்மிகம்.
காகித அட்டை (பேப்பர்பேக்);
112 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: 2018 ஆண்டு.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் கந்தரந்தாதி (உரையுடன்), திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
முன்னுரை:
ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் பல புலவர்களது வேண்டுகோளுக்கிணங்கி வாதத்தில் தோற்ற புலவர்களது செவிகளை அறுத்தொருக்கும் வில்லிபுத்தூரருடைய செயலை மாற்றுதல் வேண்டும் என்று கருதி, சனியூரில் வில்லிபுத்தூரரைச் சந்தித்து, அவருடன் வாதிட்டுக் கந்தரந்தாதி பாடல் 54வது பாட்டுக்கு உரை சொல்ல முடியாமல் வில்லிபுத்தூரர் விழிக்க, அந்தப் பாட்டுக்கு நூலாசிரியராகிய அருணகிரிநாத சுவாமிகளே உறையருளினார்.
27, 29, 56, 65, 75, 89, 96, 100 ஆகிய பாடல்களில் திருஞானசம்பந்தரைப் பற்றிக் கூறியவையெல்லாம், முருகவேள் சாரூபம் பெற்ற அபர சுப்ரமணியருள் ஒருவரே நிகழ்த்தினார் என்று கருத வேண்டும். இதைப்பற்றி பழநி விரிவுரை 63வது பக்கத்தில் பார்க்கவும்.
இந்நூலின் செய்யுட்கள் காப்பு இருபாடல்கள் தவிர மற்றவை சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்ற எட்டெழுத்துக்களை முதல் எழுத்துக்களாக உள்ளதை மிகவும் உன்னற்பாலது. இதில் ஆறுபடைவீட்டு ஸ்தலங்களும், கயிலை, திருவல்லம், திருவண்ணாமலை, தில்லை, சீகாழி, திருவரங்கம், இலஞ்சி முதலிய ஸ்தலங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
ஆதலினால், இத்தகு வித்தகம் நிறைந்த இந்தக் கந்தரந்தாதியை ஓதி உணர்ந்து அன்பர்கள் நலம் பெற எம்பெருமானை வேண்டுகிறேன்.
அன்பன்,
கிருபானந்த வாரி.
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
SKU Code | Guhashri B 045 |
---|---|
Weight in Kg | 0.370000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar |
Publisher Name | குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 20.00 Discount: 10.53%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%