Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திருப்புகழ் விரிவுரை (குன்றுதோறாடல் - முதற்பகுதி) - திருமுருக கிருபானந்த வாரியார் - Thirupughal Virivurai (Kunruthoraadal - Part 1)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 324
₹350.00
ஆன்மீகம் நூல்.  
 
கடின அட்டை; 
522 பக்கங்கள்; 
மொழி: தமிழ்;  
ஏழாம் பதிப்பு: பிப்ரவரி 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் திருப்புகழ் விரிவுரை (குன்றுதோறாடல் - முதல்பகுதி), திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
முன்னுரை: 
முருகப்பெருமான் ஒருவரையே பாடும் பரமபதிவிரத நிலையையுடைய பரமகுருநாதராகிய அருணகிரிநாதர் உலகம் உய்யப் பாடிய தெய்வத் தமிழ் திருப்புகழாகும். 
 
அருணகிரிநாதர், மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களையும் ஆறுபடை வீடுகளாக அமைத்துப் பாடியருளினார்.
 
குன்றுதோறாடல், விசுத்தி என்ற ஐந்தாவது படைவீடு ஆகும். அதி அற்புதமான சந்தங்களையுடையதாய் பரமவேத வேதாந்த நுண்பொருள்களையுடையதாய் திகழ்வது இப்பாடல்கள்.
 
இப்பாடல்களுக்கு திருவருள் துணை புரியச் சிறியேன் உரை எழுதி வெளியிட்டேன். அந்த நூல் இப்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. 
 
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டு பல காலமாக, நல்ல நூல்களை வெளியிடுகின்ற நற்பணியை மேற்கொண்ட சென்னை வானதி பதிப்பகம் திரு.ஏ.திருநாவுக்கரசு அவர்கள் இப்போது இந்தக் குன்றுதோறாடல் என்ற பகுதியை அச்சிட்டு அடியார்க்கு அமுது விருந்தாக வழங்குகின்றார்.
 
இந்த நூல் ஐந்தாம் படைவீட்டுத் திருப்புகழ் முற்பகுதியாக வெளிவருகின்றது. 
 
இது முருகனடியார்க்கு பவப்பிணியை மாற்றும் அருமருந்தாகும்.
 
இதனை ஏனோரும் வானோரும் போற்றப் பெருவாழ்வு பெற்று உய்வார்களாக.
 
அன்பன் கிருபானந்தவாரி
1988.
 
உள்ளுறை:
01.கயிலைமலை;  
02.ஸ்ரீசைலம்;  
03.திருவேங்கடம்; 
04.திருத்தணிகை;  
05.வள்ளிமலை;  
06.திருக்கழுக்குன்றம்;  
07.பேறை நகர்;  
08.மயிலம்;  
09.திரிச்சிராப்பள்ளி;  
10.திருக்கற்குடி;  
11.இரத்னகிரி.                                                                              
 
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
More Information
SKU Code VAN B 324
Weight in Kg 0.720000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:திருப்புகழ் விரிவுரை (குன்றுதோறாடல் - முதற்பகுதி) - திருமுருக கிருபானந்த வாரியார் - Thirupughal Virivurai (Kunruthoraadal - Part 1)

Similar Category Products





Other Books by திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar