Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 100
Regular Price ₹425.00 Special Price ₹410.00

Save: 15.00 Discount: 3.53%

சோழர் வரலாறு சரித்திர நாவல்.
மாமன்னன் இராஜராஜ சோழனின் வரலாறு.
Udayar - Part II - History of Cholas.
 

ஹார்ட்கவர்; 

464 பக்கங்கள்;
முதல் பதிப்பு : ஜூலை 2002; 
இருபத்து ஆறாம் பதிப்பு: ஜூலை 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

     உடையார் இரண்டாம் பாகத்திற்கான 
                                                                                முன்னுரை 
 
இனிய ஸ்நேகிதங்களுக்கு,
 
வணக்கம்.
வாழிய நலம்.
 
சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும், அதைக் கட்டிய மாமன்னன் உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரெல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவர்களுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய விஷயம்தான் ஸ்ரீ ராஜராஜ தேவரின் சாதனை.
 
கோயில் கட்டியது மட்டுமல்ல. அவர் நடத்திய அரசு பற்றியும், அவர் காலம் பற்றியும் மிகத் தெளிவான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சேரர்களைப் பற்றியோ, பாண்டியர்களைப் பற்றியோ கிடைத்த தகவலைவிட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் மண்ணில் மாவீரனாகத் திகழ்ந்த இந்த மன்னரைப் பற்றிய தகவல்கள் அதிகம் இருக்கின்றன. எவ்வளவு தூரம் எல்லைகளை விஸ்தரித்தார் என்பது வெகு எளிதாகவே தெரியவருகிறது. இவர் மீதும், இவர் கட்டிய கோயில் மீதும் ஆவல் கொண்டு பல சரித்திரப் பேராசிரியர்கள் இவரைப் பற்றி அறிவதிலேயே தங்கள் வாழ்நாளை செலவிட்டுருக்கிறார்கள். மறுபடி மறுபடி இவரை யோசித்து கிறங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்தக் கிறக்கத்தில் சிறிதளவு எனக்கும் ஏற்பட்டது.
 
மிகச் சிறிய வயதிலேயே பிரகதீஸ்வரர் கோயில் அருகே போய் நின்றபோது உடம்பெல்லாம் ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. முற்பிறவி, பல ஜென்மங்கள் எடுக்கின்ற வாழ்க்கை என்றெல்லாம் அறியும் முன்னரே அத்தகைய ஒரு உணர்வுக்கு நான் ஆட்பட்டேன். இது என்னுடைய இடம். நான் வாழ்ந்த பூமி, நான் இருந்த இடம். என்னை மக்கள் மதித்த இடம் என்றெல்லாம் நான் நினைத்து நெகிழ்ந்திருக்கிறேன். 
 
உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவரின் லட்சோப லட்சம் வீரர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அவரின் அந்தரங்க அதிகாரியாக பணியாற்றிருக்கிறேன். அந்தண வீரனாக குறுக்கே பூணூலும்; இடுப்பிலே வாளுமாக நின்றிருக்கிறேன். நான் நின்ற இடம் இது. அமர்ந்த இடம் இது என்றெல்லாம் ஒரு பிரமையில் மூழ்கிப் போயிருக்கிறேன். என் வயது ஓத சிறுவர்கள் ப்ரஹதீஸ்வரர் கோயில் ஓடிப்பிடித்து விளையாட நல்ல இடம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நான் இரண்டாம் நுழைவாயிலில் நின்று அந்த விமானத்தையே வியப்போடு பார்த்துக்கொண்டிருப்பேன். இங்கு மிக ஆச்சரியமான ஒரு விஷயம். அந்த நந்தி என்னைக் கவரவேயில்லை. பிற்பாடு அந்த நந்திக்கும் ஸ்ரீராஜராஜ தேவருக்கும் எந்த சம்மந்தமில்லையென்று தெரிந்து கொண்டேன்.
 
சேனாதிபதி கிருஷ்ணன் ராமனான பிரம்மராயர் பற்றியும், வல்லவரையர் வந்தியத்தேவருடைய பெயர் பொறித்த கல்வெட்டு எங்கிருக்கிறது என்பதையும் நானாகவே கண்டு பிடித்தேன். பித்து பிடித்தது போல் கோயிலை சுற்றிச்சுற்றி வந்திருக்கிறேன்.
 
பிரம்மராயரின் ஊரான அமண்குடி என்கிற அம்மன்குடிக்கு பலமுறைபோய் வந்திருக்கிறேன். இன்றளவும் அந்த அம்மன்குடி மகாகாளி எங்கள் வீடு கூடத்திலே வீற்றிருக்கிறாள். மிகமிக லட்சணமான அந்த சிலையின் படம் என் வீட்டில் இருக்கிறது.
 
பெரியகோயில் மட்டுமல்ல அமண்குடியும், கருதட்டாங்குடியும், கீழ்ப்பழுவூரும், மேலப்பழுவூரும், பட்டீஸ்வரத்து துர்க்கை வீற்றிருக்கின்ற பழையாரை தெருக்களும் சோழன் மேடும், உடையார் குடியும், ராஜேந்திரசோழன் அகமும் நான் பலமுறை சுற்றிவந்த இடம். என்னுடைய இடம், நான் வாழ்ந்த பூமி என்று ஒரு குதூகலத்தோடு வலம்வந்த ஊர்கள் இவை.
 
இதைப் படிக்கின்ற வாசகர்களுக்கு லேசாக சிரிப்பு இருக்கலாம். பாலகுமாரன் சற்று கிறுக்குப் பிடித்தவன். அதீத கற்பனை வளம் உள்ளவன் என்று கேலி இருக்கலாம். ஆனால், என்னைப்போல, என்னைவிட அதிகம் படித்த அனுபவம்மிக்க சில நண்பர்களும் இதேவித பிரமையில் இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
 
மற்ற கதைகள் எழுதுவதைவிட, இந்த நாவல் எழுதுகிற பொழுது மிகப்பெரிய குதூகலத்தை நான் அடைந்தேன். கதை எழுதத் துவங்கிய காலத்திலேயே இப்படியொரு ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற ஒரு எண்ணம் எனக்குள் தோன்றிவிட்டது. நல்லதற்கு, கேட்டதற்கெல்லாம் தஞ்சைத் தரணி போகையில் நான் இந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இதுபற்றியே அதிகம் சிந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட என் இருபத்தைந்து வயதில் ஆரம்பித்து இந்த ஐம்பத்தாறு வயது வரை முப்பத்தியோரு வருடங்கள் இதற்காக உழைத்திருக்கிறேன்.
 
எங்கள் ஐயன் சேனாபதி மும்முடிச்சோழ பிரம்மராயர் கிருஷ்ணன் ராமன் நினைவாகவும், உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவரின் புகழ் சொல்லும்படியாகவும் இந்தப் படைப்பு இருக்கும்.
 
நான் இன்னொரு நூற்றுப்பத்து அத்தியாயங்கள் எழுதப்போகிறேன் என்றபோது வாரப்பத்திரிகைக்கு சங்கடம் என்பதால் நாவலாக வெளியிடலாம் என்று தோன்றியது. இவ்வளவு பெரிய தொடர்கதையை யார் படித்திருப்பார்கள் என்று நான் சற்று கவலையோடு இருக்க பல வாசக உள்ளங்கள் இதைத் தொடர்ந்து படிப்பதாகச் சொல்லி என்னை உற்சாகமூட்டின. என்னை விவாதத்திற்கு இழுத்தன.
 
என் எழுத்தை எனக்குள்ளிருந்து வழி நடத்துகிற என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவர்களின் ஆசியோடுதான் இந்நாவலை எழுதத் துவங்கினேன். என்னுள் நிலைத்த அந்தச் சுடரொளிக்கு என் பணிவான வணக்கங்கள் நெடுஞ்சாண் கிடையான நமஸ்காரங்கள்.
 
என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன் 
23-மே-2002.
 
ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில்கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது. 
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
More Information
SKU Code TMN B 100
Weight in Kg 0.210000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2

Similar Category Products