SKU:
Akani B 024
Regular Price
₹250.00
Special Price
₹225.00
Save: 25.00 Discount: 10.00%
கட்டுரை.
பேப்பர்பேக்;
288 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
அகநி வெளியீடு.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
சங்க காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலை வடிவங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. தமிழகக் கலைகள் கோயில் சார்ந்தே இயங்கி வந்திருக்கின்றன. கோயில் என்ற நிறுவனம் உருவாகி வளர்ந்து எழுந்த போது, கடவுளர்கள் ஆர்ப்பாட்டம் வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்பட்டார்கள். இசையும் நடனமும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டன. கடவுள்களைப் புகழ்ந்தும், அவர்களின் மகிமைகளை வெளிப்படுத்தவும் பதிகங்களும் பாசுரங்களும் போடப்பட்டன. வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கோயில்களுக்குப் பெண்கள் நேர்ந்துவிடப்பட்டார்கள். கோயில்களில் இறை சேவைக்காக நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார் பெண்கள் கலைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்த்து வந்திருக்கிறார்கள். நீண்ட நெடிய கலை மரபில் தேவரடியார்களின் பங்களிப்பைப் பல தளங்களில் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.
எழுத்தாளர் குறிப்பு : அ. வெண்ணிலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்த இவர் “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிகளில் சிறந்த படைப்பாளி விருது, சிற்பி அறக்கட்டளை விருது, கவிப்பேரரசு - கவிஞர் தின விருது, ஏலாதி இலக்கிய விருது, தமுசெ விருது, சக்தி -2005 விருது போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “கனவைப் போல மரணம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
SKU Code | Akani B 024 |
---|---|
Weight in Kg | 0.610000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | அ.வெண்ணிலா - A.Vennilaa |
Publisher Name | அகநி வெளியீடு - Akani Veliyeedu |
Write Your Own Review