Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பெரிய புராணக் கதைகள் - பாலகுமாரன் - Periya Puraana Kathaikal - Balakumaran - Periyapuranak Kathaigal Purana Kadhaigal Periyapuraana Kadhaikal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 007
₹260.00
சிவனடியார் கதைகள்.
 
காகித அட்டை / பேப்பர்பேக்; 
256 பக்கங்கள்; 
முதற் பதிப்பு : செப்டம்பர் 1995; 
எட்டாம் பதிப்பு: ஜூலை, 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

என்னுரை: 
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள் சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். 
 
என் புத்திக்கு இதை உங்வாங்கி வெளியிடும் சக்தி உண்டோ என்று கலங்கினேன். தமிழ் பண்டிதையான என் தாயாரால் இத்தொண்டர்கள் கதை என் பால்யத்தில் பிசைந்து போட்ட தயிர் சாதத்தோடு சொல்லப்பட்டிருக்கின்றது. கைகாள் கூப்பித் தொழீர் என்பது காலையில் தினமும் பாட கற்றுத்தரப்பட்டது. 
 
வெகு நாட்களுக்குப் பிறகு சோழ அரசியல் சரிதம் படிக்க, பெரிய புராணமும் ஒருமுறை ஆய்வுக்காகப் படித்தேன். இன்று சிறுகதையாய் எழுதவேண்டும் என்கிற எண்ணத்தோடு படிக்க, இது பெரிய வேலை, எழுதுவது சிரமம். தட்டிக் கழித்துவிடலாம் என்கிற எண்ணம்தான் எழுந்தது.
 
ஆனால் தத்தா நமரே காண் என்று தடுத்த அரசன் முகம் அடிக்கடி நினைவுக்கு வந்தது. பிள்ளைக்கறி பரிமாறிய தகப்பன் மனசு எப்படியிருக்கும் என்று யோசனை வந்தது. நல்லவேளை என் மனைவி வேண்டுமெனக் கேட்டீர் இல்லாத பொருளைக் கேட்டிருந்தால் என் செய்வேன். எனக்கு மனைவி உண்டு. அழைத்து போம் என்று சிவ நெறிச் செல்வனின் வீடு மனசுல் இருந்தது. தீண்டு வாராயின் எம்மை திருநீலகண்டம் என்கிற பெண்மணியின் கோபம் புத்தியை உறுத்திற்று.
 
படித்த பிறகு மனசு முழுக்க இடைவிடாது இவர்கள் கதைகளே சுற்றிச் சுற்றி வந்தன. சிவபதம் அடைந்தார். சிவ ஜோதியில் கலந்தார் என்கிற முடிவைவிட, இவர் இம்முடிவுக்கு நகருமுன் கொண்ட வைராக்கியம் ஆழமாய் மனசுல பதிந்தது.
 
எதுவரினும் அசைக்கவே முடியாத இறை நம்பிக்கை, தாம் கொண்ட சத்தியத்தின் பால் உறுதி. இப்படி ஒரு கொள்கை உடையவன் என்ற தம்பட்டம் அடித்துக் கொள்ளாத இயல்பு. சோதனைகளுக்கு அழுது கண்ணீர் விட்டு அரற்றாது கொடுக்க சிவனுக்கு உரிமை உண்டெனில், எடுக்கவும் உண்டே என்கிற இசைவு. வாழ்க்கைப் பற்றி எந்தக் குழப்பமும் இல்லாத தெளிவு பரவசப்படுத்திற்று.
 
என் வாழ்க்கை அவஸ்தை எனக்கே கேலியாயிற்று. மறுபடி பெரிய புராணம் படிக்க கண்ணில் நீர் வழிந்தது. மனம் நொய்மையாயிற்று.
 
உள்ளே அவர்களோடு வாழ்ந்தேன். மாற ஆசைப்பட்டேன். சிவனேயென்றிருப்பது என்னவென்று புரிந்தது. எழுதும் அமைதி பிறந்தது.
 
இந்த எலி ஓட்டப் பந்தய வாழ்க்கையின் தன்மை இவர்கள் சரிதம் படிக்க ஆசுவாசப்பட்டது. உன்னைக் காட்டிலும் தெளிவாய் எவரேனும் மாறலாம். எழுது. இன்றைய இளைஞர்கள் படித்து உணரட்டும். எழுது. உள்ளே குரல் கேட்டது. 
 
அவனருளாலே அவன் தாள் வணங்கி எழுதத் துவங்குகின்றேன். குற்றம் இருப்பின் சுட்டிக்காட்டி பொறுத்தருள வேண்டும். நன்றெனப் பட்டால், அது நாயன்மார்களின் வாழ்த்து.
 
இம்முயற்சியை ஆசிர்வதித்த சிருங்கேரி மடத்து ஆச்சார்யாளுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.
 
தென்னாடுடைய சிவனே 
என்னோடிரும்  
 
- பாலகுமாரன்.
 
"அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலரின் (உதாரணமாக காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார் மற்றும் இன்ன பிறர்) வாழ்வியல் சம்பவங்களை விளக்கி, எப்படி அவர்கள் இறை எனும் சிவன் அருள் பெற்று, நாயன் மாராய் உயர்ந்தனர் என்பதை, பரவசத்துடன் கூறும் வார்த்தைப் புதையல்."
 
உள்ளே: 
01.காரைக்கால் அம்மையார்;  
02.திருமூலர்;  
03.மூர்த்தி நாயனார்;  
04.மானக்கஞ்சாற நாயனார்;  
05.இளையான்குடி மாற நாயனார்;  
06.குங்கிலியக் கலய நாயனார்;  
07.சண்டேஸ்வர நாயனார்;  
08.மெய்ப்பொருள் நாயனார்;  
09.சிறுத்தொண்டர்;  
10.கண்ணப்ப நாயனார்;  
11.திருநீலகண்டர்;  
12.தண்டியடிகள்;  
13.இயற்பகை நாயனார்;  
14.சிநேகிதன் (சுந்தரமூர்த்தி நாயனார்).
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார். 
More Information
SKU Code TMN B 007
Weight in Kg 0.050000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM
Write Your Own Review
You're reviewing:பெரிய புராணக் கதைகள் - பாலகுமாரன் - Periya Puraana Kathaikal - Balakumaran - Periyapuranak Kathaigal Purana Kadhaigal Periyapuraana Kadhaikal

Similar Category Products