Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

காதலாகி கனிந்து Kathalagi Kaninthu @ Kaathalagi Kanindhu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 003
₹205.00
நாவல்.

பேப்பர் பேக்; 
பக்கம் : 472
பதிப்பு : 2
வெளியீட்டு ஆண்டு : 2007.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

காதல் என்பது கெட்ட வார்த்தை என்றும் அதே நேரம் காதல் இல்லையெனில் சாதல் என்ற பாரதியின் கவிதையும் ஒரு சேரத் தாக்கிய குழப்பமான கிராமத்து குடும்ப சூழ்நிலை எனக்கு.  உயிர்ப்போடு இருந்து உயர வளர வேண்டுமென்றால் எந்நேரமும் காதலோடு வாழ்க்கையை அணுகுவதே வழி என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டீர்கள்.

மத ஆவேசங்களையும், ஜாதிக் கூச்சலையும்,மொழி பாகுபாடுகளையும், பொருளாதார யோக்கியதைகளையும் தாண்டியதே கடவுள் விஷயம் என்பதைப் புரிய வைத்திருக்கிறீர்கள்.

சம்பவங்களை விவரித்து விமரிசிக்கும் அழுகு படிப்பு சுவராசியத்தை அதிகரிக்கிறது.  இருநூற்று நாற்பது படைப்புகள் எழுதியதும் இந்தப் புத்தகம் எழுதுவதற்கான பயிற்சிதான் என்று சொல்கிறீர்கள்.  அந்த கனம் இதில் தெரிகிறது.

                                                   ***********************

கதிரவனின் அசைவுக்குள் காலம் நிர்ணயிக்கின்ற நாம், கடவுள் என்ற விஷயத்தை ஆராய்வது பானைக்குள் இருந்த தவளைகள் வானம்பற்றி பேசுவதுபோல நகைப்புக்குரியது. ஆனாலும், தவளைகள் பேசத்தான் பேசும். பேசாதிருக்க அவைகளால் முடியாது. ஏதேனும் ஒரு தவளை பேச்சு நிறுத்தி பானையின் வாய்வழியாக வெளியே வந்து வானம் பார்த்து விழிவிரிய திகைத்து நிற்றல் போல மனிதர்களில் சிலர் இவ்வித அனுபவத்திற்கு ஆட்படுகின்றனர். வெளியே குதித்த தவளை பனையின் விளிம்புக்குள் நின்று, போதும் பேசுவதை நிறுத்துங்கள். நீங்கள் நினைப்பதுபோலல்ல வானம் என்று சொன்னாலும் உள்ளிருக்கிற தவளைகள் பேச்சை நிறுத்தாது.

எதற்கு சொல்வது, ஏன் பேச்சு என்று வெளியே குதித்த தவளை பேசாமல் வானத்தை அனுபவிப்பதோடு நின்று விடவும் கூடும். இந்த உலகத்தில் பல உன்னத புருஷர்கள் இப்படித்தான் கடவுள் என்பதை அனுபவித்து வாய்திறந்து சொல்லமுடியாது ஆழ்ந்த மௌனத்தில் அடங்கிப் போயிருக்கிறார்கள். மேலும், சில உன்னத புருஷர்கள் மனிதர்கள்மீது கருணை கொண்டு இது அல்லவே வாழ்க்கை, சொல்வதல்லவே வானம் என்று மெல்லியதாய் பேசியிருக்கிறார்கள். அந்த மெலிதான பேச்சுக்கு வேதங்கள் என்று பெயர்.

ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
More Information
SKU Code TMN B 003
Weight in Kg 0.090000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM
Write Your Own Review
You're reviewing:காதலாகி கனிந்து Kathalagi Kaninthu @ Kaathalagi Kanindhu

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran