Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஆழ்வார்கள் ஓர் எளிய முறையில் அறிமுகம் - Azhwargal Or Eliya Murayil Arimugham

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 238
₹125.00
அட்டை: பேப்பர்பேக்; 
மொழி: தமிழ்
பக்கம் : 136 பக்கங்கள் 
எழுத்தாளர் :  சுஜாதா

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக் கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக. 
 
ஆழ்வார்களுக்கு அறிமுகம் மட்டும்தான் இந்த நூல். இதைப் படிக்கிறவர்களுக்கு ஆழ்வார் பாடல்களின் மேல் ஆர்வம் நிச்சயம் ஏற்பட்டு நாலாயிரத்தையும் நாடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
 
இந்நூலில் பிரபல எழுத்தாளரும், வைணவருமான சுஜாதா எல்லா ஆழ்வார்களையும் ஆண்டாளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். கிபி 650 முதல் 950 வரையிலான காலத்தைத் தமிழில் பக்தி இலக்கிய காலம் என்பர். இதில் வைணவத்தைச் சார்ந்த பாடல்கள் 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' என்று நாதமுனிகளால் தொகுக்கப் பட்டன. இவைகளை இயற்றிய ஆழ்வார்கள் பக்தி நெறியையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருமாலை எப்போதும் மறக்காதவர்கள். திருமால் ஒருவனே பரம்பொருள் என்று நிரூபித்தவர்கள். மனிதநேயத்தை வளர்த்தவர்கள். தமிழுக்கு மேன்மையளித்தவர்கள். இவர்கள் அனைவரும் பகவானின் அம்சங்கள் எனக் கருதப் படுகிறார்கள் ஆழ்வார்களை எளிய தமிழில் அவர்கள் காலம், வாழ்க்கை பற்றிய சரித்திரக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி பல பாடல்களின் நேரடியான பொருளைச் சொல்லும் இந்நூலிள் முதல் நோக்கம் ஆழ்வார்களைப் பற்றியே அறியாதவர்களுக்கு அவர்கள் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே.
 
மேற்கொண்டு அவர்கள் பாடல்களின் உள்ளர்த்தங்களையும் சுவாபதேசங்களையும் அறிய விரும்பினால் அவைகளை விரிவாக பல வைணவ நூல்களில் காணலாம். வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்து கொண்டு அதை வியப்பாகப் பார்த்து ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்பையும் மரியாதையையும் வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார் சுஜாதா.
 
எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 238
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:ஆழ்வார்கள் ஓர் எளிய முறையில் அறிமுகம் - Azhwargal Or Eliya Murayil Arimugham

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா