Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Bharathiyar Kavithaigal Muzhuvadhum (Pocket Size) பாரதியார் கவிதைகள் முழுவதும் (பாக்கெட்)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 92
₹40.00
தமிழ் கவிதை புத்தகம்; 
பாரதியார் இயற்றிய பாடல்கள் தொகுதி;  
காகித அட்டை(பேப்பர்பேக்); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font); 
மொழி: தமிழ்; 
பாரதி பதிப்பகம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இயன்றவரை 
தமிழே பேசுவேன், 
தமிழே எழுதுவேன். 
சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். 
எப்போதும் பராசக்தி - முழு உலகின் முதற் பொருள்  - 
அதனையே தியானஞ்  செய்து கொண்டிருக்க முயல்வேன். 
அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன். - மகாகவி பாரதியார். 

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்      - பாரதி. 

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?   

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...” 

பாரதியாரின் படைப்புகள்:- 
குயில் பாட்டு; 
கண்ணன் பாட்டு; 
பாப்பா‌ பாட்டு; 
சுயசரிதை (பாரதியார்); 
தேசிய கீதங்கள்; 
பாரதி அறுபத்தாறு; 
ஞானப் பாடல்கள்; 
தோத்திரப் பாடல்கள்; 
விடுதலைப் பாடல்கள்; 
விநாயகர் நான்மணிமாலை; 
பாரதியார் பகவத் கீதை (பேருரை); 
பதஞ்சலியோக சூத்திரம்; 
நவதந்திரக்கதைகள்; 
உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு; 
ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்); 
சின்னஞ்சிறு கிளியே; 
ஞான ரதம்; 
பகவத் கீதை; 
சந்திரிகையின் கதை; 
பாஞ்சாலி சபதம்; 
புதிய ஆத்திசூடி; 
பொன் வால் நரி; 
ஆறில் ஒரு பங்கு         

ஆசிரியர் குறிப்பு: சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
More Information
SKU Code Bharti B 92
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Mahakavi Bharathiyar மகாகவி பாரதியார்
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Bharathiyar Kavithaigal Muzhuvadhum (Pocket Size) பாரதியார் கவிதைகள் முழுவதும் (பாக்கெட்)

Similar Category Products





Other Books by Mahakavi Bharathiyar மகாகவி பாரதியார்