Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 223
₹340.00
அட்டை: பேப்பர்பேக்; 
பக்கங்கள்: 328; 
பதிப்பகத்தார்: திருமகள் நிலையம்;  
மொழி: தமிழ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இயந்திரமும் மனிதனும் 

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் என்னென்ன நடக்குமென்ற தன் சிந்தனையோட்டத்திற்கு உரு கொடுக்கிறார் சுஜாதா. இந்தக் கதையில் ஜீனோ என்ற இயந்திர நாய் மனித சமுதாயம் சுபிட்சமடைய ராணி நிலாவுக்கு உதவுகிறது.

உலக நாடுகளின் தலைமையை உற்று நோக்கும்போது விபரீதமான போர் நோக்கும் சர்வாதிகார எண்ணமுமே தலைவிரித்தாடுகிறது. வலுவிழந்த நாடுகள் செய்வதறியாது அயல்நாட்டு ஆயுதங்களை வாங்கி தன்னைத் தற்காத்துக் கொள்ள முனைகின்றன. நாட்டு மக்கள் பட்டினி கிடந்தாலும் பாதகமில்லை, போர் வலுப்பெற வேண்டுமென்று அள்ளும் பகலும் அயல்நாட்டை நம்பியே வாழ்கின்றன.

இந்த விபரீதப் போக்கு நீடித்தால் மனித சமுதாயம் என்ன ஆகும்? உப்பு சப்பற்ற இயந்திர வாழ்க்கை தான் மிஞ்சும்.

இந்தச் சூழலில் சுஜாதா மனிதர்கள் செய்யும் மோசடிகளைப் பார்த்து இயந்திரத்துக்கு யோசிக்கும் திறனைத் தருகிறார்.

ஜீனோ என்ற குட்டி நாய் இறுதியில் வந்த மக்கள் ஆட்சி எல்லாமே மக்களை ஏமாற்றி சதி செய்யும் கூட்டம் என்பதை உணர்ந்து நிலாவுக்கு உதவி செய்கிறது. அதற்காக அது செய்யும் சாகசங்கள் மிக அற்புதம். அந்த இயந்திர நாய்க்குக்கூட பெண்ணின் கவர்ச்சியில் கொள்ளை இன்பம். வாரம் ஒரு தடவை முத்தம் கேட்கிறது.

மனிதர்களை விட இயந்திரங்கள் உண்மையாய்ப் பாசாங்கு செய்யாமல் இந்த தேசத்தைக் காக்க முடியும். ஆள்வோர் தன் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் சுயநல வேட்கை கொண்டு நாட்டை வேட்டைக் காடாக்கி வரும் இந்த நாளில்..? அதற்கு மாற்று என்ன? இப்படி யோசித்ததின் பலனே இந்தப் புதிய சிந்தனை. -பதிப்பகத்தார் 

இப்போது ஜீனோவை உங்களுக்கு ஒருவாறு புரிந்திருக்கும். இனி மீண்டும் ஜீனோ.... 

எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன் )
தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக்  கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக  ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன. 
More Information
SKU Code TMN B 223
Weight in Kg 0.080000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா