Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

முதல் மூவர் - ராஜாஜி - சோமு - Mudhal Moovar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 340
₹35.00

ஆன்மீகம் நூல். 

காகித அட்டை (Paperback); 

88 பக்கங்கள்; 

மொழி: தமிழ்;

முதற் பதிப்பு: ஜனவரி, 1974;

நான்காம் பதிப்பு: ஆகஸ்ட், 2012.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் முதல் மூவர், ராஜாஜி மற்றும் சோமு அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.   
 
முன்னுரை: 
மீ.ப.சோமு
 
மதிப்புக்கு உரிய ராஜாஜி இந்த மண்ணுலகிலிருந்து மறைந்து ஓர் ஆண்டு ஓடிவிட்டது. அவருடைய அன்பாயும் நல்லுறவையும் எண்ணி எண்ணி உருகாத நாளே இல்லை. இதயத்தின் பசுமையான நினைவுகளாக அவர் உயிருடன் வாழ்ந்து வருகிறார்.
 
ராஜாஜியோடு சேர்ந்து ஒருமித்து இலக்கியப் பணியில் ஈடுபடுவது என்பது ஈடற்ற அரிய அனுபவமாகும். அத்தகைய எத்தனையோ அனுபவங்களை அவரோடு இணைத்து என் வாழ்விலே இறைவன் கூட்டுவித்தான். முக்கியமாகத் திருமூலருடைய திருமந்திரப் பாடல்களுக்கும் முதல் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் நாங்கள் ஒருமித்து எழுதிய விளக்க உரைகளின் அனுபவம், மனம் நெகிழ்ந்து போற்றும் சிந்தனையாக நினைவிலே நிலைத்து நிற்கிறது. எத்தனை சர்ச்சைகள், எத்தனை வாதப் பிரதிவாதங்கள், எத்தகைய உரையாடல்கள் - இவற்றையெல்லாம் இங்கே எழுதத் தொடங்கினால் இந்த முன்னுரையே ஒரு தனி நூலாக விரிந்து விடும்.
 
ராஜாஜி மறைந்த பிறகு வெளிவருகிற இந்த "முதல் மூவர்" நூலுக்கு, அவருடைய அமர நினைவை உள்ளத்தில் வைத்து மொழிகின்ற அஞ்சலியுரையே முன்னுரையாகும். இந்தப் புனித அஞ்சலியை நான் அவருக்குச் செய்யக்கூடிய முதல் ஆண்டின் சிராத்தமாகக் கருதி மனம் மொழி மெய்களால் சிரத்தையோடு செலுத்துகிறேன். 
 
- மீ.ப.சோமசுந்தரம் 
12-1-1974
 
 
"இங்கே ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்!" என்று சொல்லி அவரையும் வரவேற்று எழுந்தருளச் சொன்னார்கள். அப்பொழுது மழை அதிகமாகி இருள் கவிழ்ந்தது. இருட்டிலே மூவரும் ஒருவரையொருவர் விசாரித்து அறிந்து கொண்டார்கள். அப்பொழுது மூவருக்கும் மேலாக ஒரு நெருக்கடி உண்டானதை மூவரும் உணர்ந்தார்கள். மூன்று பக்தர்கள் சேர்ந்த இடத்தில் நாலாவதாக எம்பெருமான் வந்து சேர்ந்து விட்டான்!
 
முதலாவது யாத்திரிகரே பொய்கையாழ்வார். இரண்டாவது மகான் பூதத்தாழ்வார். மூன்றாவது யாத்திரிகர் பேயாழ்வார் என்ற ஞானி.
 
இந்தக் கதை முதலாழ்வார்கள் மூவருடைய அந்தாதியின் தோற்றத்தோடு பரம்பரையாக வந்த வரலாறு.
 
இந்த மூவரும் உலக அந்தகாரத்திலே இறைவனைக் காணுவதற்கு ஏந்திய ஞானத் தமிழ் விளக்குத்தான் முதல் மூன்று திருவந்தாதிகள். முதழ் ஆழ்வார்கள் என்று இந்த மூன்று முனிவர்களே வணங்கப் பெறுகிறார்கள்.
                                                                                      
 
எழுத்தாளர் பற்றி : முறைசாரா முறையில் ராஜாஜி அல்லது சி.ஆர் என்று அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஒரு இந்திய அரசியல்வாதி, சுதந்திர ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1950 ல் இந்தியா விரைவில் குடியரசாக மாறியதால், ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
More Information
SKU Code VAN B 340
Weight in Kg 0.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ராஜாஜி - சோமு - Rajaji & Somu
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:முதல் மூவர் - ராஜாஜி - சோமு - Mudhal Moovar

Similar Category Products





Other Books by ராஜாஜி - சோமு - Rajaji & Somu