Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பச்சை வயல் மனது - பாலகுமாரன் - PACHAI VAYAL MANADHU - Balakumaran - Patchai Vaial Manathu - Pachay Vayal Manatu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 140
₹210.00

குடும்ப கதைகள் / குடும்ப நாவல்/ புதினங்கள். 

காகித உறை/ பேப்பர்பேக்; 

288 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1984; 

பதினொன்றாம் பதிப்பு: நவம்பர் 2018. 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

பொருளடக்கம்:                       பக்கம் 
1.பச்சை வயல் மனது                  5; 
2.பனி விழும் மலர் வனம்!         63; 
3.காதற் கிளிகள்!                      152; 
4.நல்ல முன் பனிக்காலம்         219.
 
பச்சை வயல்  மனது: 
"சோ சோ பாடி பரண் ஏறி 
குருவிகள் ஓடக் கவண் கல்லால் 
தினை வயல் காத்த குறவள்ளி 
கதைகள் சொன்னார் வானொலியில் 
மொட்டை மாடி வெயிலிலே
வற்றல் வடங்கள் பாயப் பரப்பி 
மடிக்கோல் சகிதம் நானிருப்பேன் 
வேப்பங் காக்கை சிறகொடிக்க.
சினிமா பட்டு சில தெரியும் 
ஆனை வருமா மாடிக்கு 
ஆள்தான் வருமா படியேறி?
ஓட்டுச் சரிவில் வாய் பிளந்த 
புகைக் கூண்டருகே பூனைகள் 
மெல்லக் குமுறும் வால் குழைத்து 
சிரித்துக் கொள்வேன் உதட்டுக்குள்..."
 
"ம்ம்... உனக்கும் தனிமை வேதனையாதாண்டி இருக்கு. அதான் இப்படிக் கொட்டறே. இன்னும் வேற ஏதாவது சொல்லேன் இதைவிட ரொமான்டிக்கா எழுதியிருக்கியா..." 

பனி விழும் மலர் வனம்:

"என்ன குட்டிகளா, ஆபீஸ்ல கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஒரே சிரிப்பும், கும்மாளமுமா இருக்கே. செமை மூடா ரெண்டு பேருக்கும்." சாவித்திரி எதிரே உட்கார்ந்து கேரியரைத் திறந்தாள்.

"மாமி, மாமி... இன்னொரு ஜோக் சொல்லுங்க மாமி!" நாகலக்ஷ்மி, சாவித்திரியிடம் குழைந்தாள். 

"மாமி கீமின்னே நாக்கை இழுத்து வெச்சி அறுத்துடுவேன். ஏண்டி என்னைப் பார்த்தா மாமி மாதிரியா இருக்கு?"

"ஹை, நீ மட்டும் குட்டின்னு கூப்பிடலாமா?"

"அது ஒரு மாதிரி லவ்வுடி."

உங்க வீட்டுக்காரர் குட்டின்னுதான் உங்களைக் கூப்பிடுவாரா மேடம்!" புனிதா எதிரே உட்கார்ந்தாள். 

காதற் கிளிகள்:

ஒரு புல்லை தர்ம நியாயத்தோட வாழணும்னா அவன் பெண்டாட்டி தர்ம நியாயத்தோட இருக்கணும்.

அதுக்காகத்தான் மனசுக்குள்ள நிறைய கணக்கு போட்டு எம் புள்ளைக்கு நல்ல பொண்ணா தேடறேன்.

ஹாங்! நீங்க கேக்க வர்றது புரியறது. நீ கணக்கு போட்டா போதுமா. மேல ஒருத்தன் இருக்கானேன்னு தானே கேக்கிறேள்.

நான் நாள் தவறாம பிரேயர் பண்றேன். பகவானே! என் புள்ளைக்கு நல்ல பொண்டாட்டியைக் கொடு. அவனைத் தர்மவானா வளர்க்கிற மனைவியைக் கொடு. நான் இதை எனக்காக கேக்கலை. உனக்காக கேக்கிறேன். உன்னுடைய தர்மம் இங்கே நிலைச்சு நிக்கனும்னு கேக்கிறேன். அப்படின்னு பிரார்த்தனை பண்ணிட்டுதான் வெளியே வருவேன். அவர் உத்தரவு இருந்தால்தான் பொண்ணு பார்ப்பேன்.

இப்ப நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கிறது பகவானுடைய அனுக்கிரஹம். அவர் கட்டளை. போய்ப் பாருன்னு உத்தரவு கொடுத்த பிறகுதான் வந்திருக்கேன்.

நல்ல முன் பனிக்காலம்: 

"தங்கம் என்பது என்ன? அது ஒரு மென்மையான உலோகம். சற்று அரிதான உலோகம். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத்தான் இதற்கு ஒரு மதிப்பு வந்திருக்கிறது. செம்பு கலக்காத தங்கத்தால் எந்த ஒரு உபயோகமுமில்லை. இது செம்பு கலக்காத தங்கம்!" ஒரு சுருள் பட்டையை குரானா எடுத்துக் காட்டினார்.

ஒளிகுன்றிய கோணல்மாணலான ஸ்படிகம் போன்ற ஒரு கல்லை மேசையின் மீது வைத்துவிட்டு "இதன் விலை நாப்பத்து ஏழு லட்சம்" என்றார். பெண்கள் வாய் பிளந்தார்கள்.

"மூன்று தலைமுறையாய் எங்கள் குடும்பத்தில் உள்ள வைரக்கல் இது. தேவையானபோது சிறிது சிறிதாக வெட்டிக் கொள்கிறோம். என் தாத்தாவின் அப்பா, ஒரு ஆயிரம் வெள்ளிக்காசுக்கு ஒரு சுல்தானிடமிருந்து இதை வாங்கினார்.

பட்டை தீட்டப்பட்டால்தான், தீட்டப்பட்ட விதத்தால்தான் வைரத்துக்கு மதிப்பு. இதிலிருந்து செய்யப்பட்ட வைரத்தோடு இது. புளு ஜோக்கர் வைரம். ஜோடி அறுபதாயிரம். ஏழு ஏழு பதினாலு கல் ஒன்பது கிராம்."

பதினோரு மணியிலிருந்து இரண்டு மணி வரை பாடம் நடந்தது. ஆர்வமிக்க அந்த பெண்குழந்தைகள் ஏகப்பட்ட விஷயம் அங்கு தெரிந்து கொண்டார்கள். கடையை விட்டு வரும்போது அவர் காலை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு வந்தார்கள். அவர் எல்லா குழந்தைகளுக்கும், மயில் பொம்மையிலான வெள்ளி குங்குமச் சிமிழ் கொடுத்தார்.

"எங்க வீட்டுல கலக்கிட்டேண்டி, எங்க அம்மா தாலிக்கொடியை கழட்டி கையில எடை போட்டு இத்தனை கிராம் கரெக்டா சொன்னேன். எங்கம்மா ஆடிப்போயிட்டாங்க. சேதாரம் போக என்னா மதிப்புன்னு கணக்கு போட்டு சொன்னேன். எங்கப்பா எழுந்து வந்து கை குலுக்கினார்.

ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

More Information
SKU Code TMN B 140
Weight in Kg 0.110000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:பச்சை வயல் மனது - பாலகுமாரன் - PACHAI VAYAL MANADHU - Balakumaran - Patchai Vaial Manathu - Pachay Vayal Manatu

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran