Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அடுத்த நூற்றான்டு - Adutha Nootraandu - Next Century - Essays from Sujatha

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 211
₹95.00
வகை : கட்டுரைகள் ;  
எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 184

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
எழுபது, எண்பதுகளில் கதையும் நாவலும் எழுதி பிரபலமாகிக் கொண்டிருந்த சுஜாதாவை பல கல்லூரிகளில் அழைத்துப் பேசச் சொன்னார்கள்.  அப்போது அங்குள்ள மாணவர்களின் சூழ்நிலை - உள்ளப்போக்குகளை நன்கு அறிந்து கவலைப்பட்டார்.
 
எதிர்காலச் சிற்பிகளான இளம் உள்ளங்களைச் செம்மைப்படுத்த எண்ணி அவர்களுக்கு நல்ல அறிவுரைகளைப் புகன்றார். கதை, கவிதை, எழுதக்கூடியவர்களை ஊக்கப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்கள் சிறந்தோங்க வேண்டுமென்று எண்ணினார். அதன் விளைவாக பல்வேறு விஞ்ஞானக் கதைகளை எழுதினார். அவை வேடிக்கை கதையல்ல. விஞ்ஞானத்தை அவை வேடிக்கை கதையல்ல. விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த விஞ்ஞானத்தையே எளிதில் புரிந்துகொள்ள மிகச் சுலபமாக கதை போல பல கட்டுரைகளை எழுதி எல்லோரையும் படிக்கச் செய்தார். இந்த இருபதாம் நூற்றாண்டில் என்னென்ன நிகழப்போகிறது, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் தெளிவாய்க் கண்டு அறியலாம்.
 
கம்ப்யூட்டர் இயங்கும் விதம் பற்றியும் அதன் மூலமாக விளையும் அற்புதங்களைப் பற்றியும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பல்வேரு தலைப்புகளில் இந்த நூலில் தந்துள்ளார்.
 
விஞ்ஞானத்தைப் பரப்ப அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நேரமிது. 1987-ல் இளையான்குடி டாக்டர் ஜாகிர்ஹுசேன் கல்லூரியில் நடந்த அறிவியல் தமிழ் கருத்தரங்கில் சுஜாதாவுக்கு 'அறிவியல் இலக்கியச் செல்வர்' என்ற பட்டத்தைக் குன்றக்குடி அடிகளார் வழங்கினார். அதே கூட்டத்தில் சுஜாதா தமிழில் கம்ப்யூட்டர்களை புகுத்த வேண்டுமென்றார். இது பலருக்குச் சாத்தியமாகப்பட வில்லை. ஜப்பானில் இது சத்தியமாக இருப்பதை ஜப்பான் போய் காந்த சுஜாதா தெளிவுபட விளக்கினார்.
 
பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய விஞ்ஞான தினமாக அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த நாளில் விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் ஒளியின் இயல் பற்றி 'ராமன் விளைவு' என்னும் அறிய கண்டுபிடிப்பை வெளியிட்டு மேற்கத்திய விஞ்ஞானத்தில் இந்தியா உலகப் புகழ் அடையச் செய்தார்.
 
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அதிக வசதியும் விஞ்ஞானிகளுக்கு அதிக வருவாயும் கிடைக்கிறது.
 
கம்ப்யூட்டர் இயங்கும் விதம் பற்றியும் அதன் மூலமாக விளையும் அற்புதங்களைப் பற்றியும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பல்வேறு தலைப்புகளில் இந்த நூலில் தந்துள்ளார் சுஜாதா. - பதிப்பகத்தார்.
 
பொருளடக்கம்:-
1.வார்த்தைகள் வந்தே தீரும் 
2.மூவகைச் சிருஷ்டி தத்துவங்கள் 
3.க்வாண்டம்  அணுவும் துகள்களும் 
4.தற்செயலும் அநிச்சய தத்துவமும் 
5.பிரபஞ்சத்தில் நாலே சக்திகள் 
6.அடுத்த நூற்றாண்டு 
7.டெலிபோன் விந்தைகள்!
8.அடுத்த நூற்றாண்டுக் கனவு...
ராங்நம்பர் விழாத டெலிபோன்!
9.காகிதச்செலவைக் குறைக்கும் கம்ப்யூட்டர் 
10.நிக்நெட்  
11.நன்மையும் தீமையும் 
12.கம்ப்யூட்டர் மூலம் களவு!
13.' குட்மார்னிங்' சொன்ன சில்லு 
14.கம்ப்யூட்டர் இசை 
15.பேசும் சில்லுகள் 
16.கம்ப்யூட்டருக்குத் தெரியாத விஷயங்கள்  
17.அறிவுதான் சக்தி!
18.கம்ப்யூட்டருக்கு அறிவு உண்டா?
19.கம்ப்யூட்டர் தரும் எக்ஸ்-ரே படங்கள்!
20.பிரமிக்க வைத்த கம்ப்யூட்டர் கண்காட்சி 
21.அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர் மனித மொழி பேசும் 
22.ஸிடிராம் என்கிற விந்தை 
23.சினிமாவில் கம்ப்யூட்டர் 
24.எறும்பு கம்ப்யூட்டர்கள் 
25.பிரபஞ்சத்தின் எல்லையை நோக்கி 
26.விண்வெளியில் காலணிகள் 
27.மற்ற கிரகங்களும் மனிதர்களும் 
28.மாற்று மனிதனும் மூப்பு ஆராய்ச்சியும் 
29.விஞ்ஞானம் முன்னேறும். மனிதத்தன்மை முன்னேறுமா?
 
எழுத்தாளர் சுஜாதா:  சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 211
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:அடுத்த நூற்றான்டு - Adutha Nootraandu - Next Century - Essays from Sujatha

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா