Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அப்சரா - Apsara

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 208
Regular Price ₹100.00 Special Price ₹80.00

Save: 20.00 Discount: 20.00%

அட்டை: பேப்பர்பேக்; 
மொழி: தமிழ்
பதிப்பகத்தார்: திருமகள் நிலையம்; 
ஆசிரியர் : சுஜாதா 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், போலீஸின் துரத்தல், துப்பறிதல், தடுக்கப் போராடுதல் என விறுவிறுப்பான தளத்தில் பயணிக்கும் சுறுசுறு நாவல். ~கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படியே உடல் நன்றாக மூடப்பட்டிருந்தது. கைரேகைகள் பதிவதைப்பற்றி அவன் கவலைப்படுகிறவனாகத் தெரியவில்லை. அந்தப்பையில் மிகத் தெளிவாக அவனுடைய விரல் அடையாளம் பதிந்திருக்கிறது. அவன் சட்டையின் நூல் ஒன்று அகப்பட்டிருக்கிறது. அதை லாபரட்டரிக்காரர்கள் என்ன செய்யப்போகிறார்கள். தெரியாது அப்புறம் இந்த அப்ஸரா.   -   சுஜாதா 

எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன் )

தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக்  கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக  ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன. 

More Information
SKU Code TMN B 208
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:அப்சரா - Apsara

Similar Category Products