Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கோதையின் பாதை III - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Kodhaiyin Paadhai III - Kothayin Paathai III - Kothaiyin Pathai III - Kodhayin Padhai 3 - Sri Mukkur Lakshminarasimhachariar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 438
₹165.00

ஆன்மீகம் நூல்; வைணவ பக்தி நூல்; 

தெய்வ மங்கை ஆண்டாள் புகழ் பாடும் நூல்.

 

காகித அட்டை /பேப்பர்பேக்);

264 பக்கங்கள்; 

முதற் பதிப்பு: பிப்ரவரி, 2007; 

ஏழாம் பதிப்பு: ஜனவரி, 2021.

மொழி: தமிழ்;      

படிக்கக்கூடிய எழுத்துரு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் கோதையின் பாதை மூன்றாம் பாகம், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                                                                 
 
கோதை என்பதற்கு நல்ல வாக்கு அருள்பவள் என்பது பொருள் பொருள். அவளுடைய திவ்யமான திருவடிகளை எப்போதும் மனசில் நினைப்பவர்க்கு நல்வாக்கை கொடுத்து அருள்வாள். மங்களமான சுபசொற்களை நாவால் பேச அனுக்ரஹம் செய்வாள்.
 
கோதை திருமாலை மணக்கும் பேரு பெற்றவள். இரு மாலைகளைக் கட்டி தினமும் திருமாளுக்குச் சூட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. பூமாலையைச் சூடியும், பாமாலையைப் பாடியும் அவன் திருவடிகளில் சமர்ப்பித்தாள். அதனால் "சூடிக் கொடுத்த நாச்சியார்" என்னும் பெயர் பெற்றாள். 
 
கண்ணனிடம் தன் காதலை வெளிப்படுத்த ஆண்டாள் பூக்களை தூதாக அனுப்பினாள். என்னுடைய ஆசையை எம்பெருமானிடம் தெரிவித்து அவன் அருளை எனக்கு பெற்று தாருங்கள்" என்று சொல்லி அனுப்பினாள். இதன் மூலம் ஆண்டாள் கண்ணனையும் ஆண்டாள், நம்மையும் ஆள்கிறாள்.                                                                                                                                            
ஆசிரியர் குறிப்பு : ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள். இந்த ஐந்து நரசிம்மர்களும் தம்மைக் காட்டிக்கொண்டது ஸ்ரீ உ.வே. முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் என்ற புகழ் பெற்ற நரசிம்ம உபாசகரிடம். இவர் உலக நன்மைக்காக நரசிம்மரின் அவதார தினமான சுவாதி நட்சத்திரங்களில் நூற்றியெட்டிற்கும் மேலான யக்ஞங்களை நடத்தியுள்ளார்.
 
இவற்றில் சில, பிரபல நரசிம்ம ஷேத்திரங்களான, மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம் என்ற சோளிங்கர், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், நைமிசாரண்யம், பிருந்தாவனம், ஸ்ரீ ரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
 
ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் மட்டபல்லி யக்ஞ வாடிகை சந்நிதானத்தில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியாரின் நாலடி உயரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிலாரூபம். இவர் நிகழ்த்திய நூற்றியெட்டிற்கும் மேற்பட்ட சுவாதி யக்ஞங்களில், யக்ஞ மூர்த்தியாக இருந்த லஷ்மி நரசிம்மர், இன்றும் மாதந்தோறும் சுவாதித் திருமஞ்சனம் பெற்றுக்கொண்டு அழகுறக் காட்சியளிக்கிறார்.
More Information
SKU Code VAN B 438
Weight in Kg 0.600000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கோதையின் பாதை III - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Kodhaiyin Paadhai III - Kothayin Paathai III - Kothaiyin Pathai III - Kodhayin Padhai 3 - Sri Mukkur Lakshminarasimhachariar

Similar Category Products





Other Books by முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar