Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திசை கண்டேன் வான் கண்டேன் - சுஜாதா - Thisai Kanden Vaan Kanden - Sujatha - Thisai Kandaen Vaan Kandaen - Tisai Kandaen Van Kandaen

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 198
₹120.00
மர்ம நாவல்கள் / மர்ம புதினங்கள்.
 
காகித அட்டை/ பேப்பர்பேக்;  
168 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: மார்ச், 1983; 
நான்காம் பதிப்பு: செப்டம்பர், 2012.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

திசை கண்டேன் வான் கண்டேன் - நூலின் தலைப்பே, இந்தத் தலைப்பில் எழுதக்கூடியவர் யார் என்பதைச் சொல்லிவிடும்.
 
ஆம்! வியப்பிற்குரிய விஞ்ஞான விஷயங்களைத் தன் கற்பனையில் குழைத்து மெருகேற்றி விறுவிறுப்பான புதினங்களைப் படைத்து வாசர்களிடையே உலவ விடுவதில் திரு. சுஜாதா அவர்களுக்கு இணை அவரேதான்.
 
வேற்று கிரகத்திலிருந்து பூமிக்குப் புறப்பட்டு வருகிறவர்கள் - மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட யந்திரங்கள்கூட - பூமிக்கு வந்தவுடன் இங்குள்ள மக்களுடன் பழகிய பிறகு, இங்குள்ளவர்களைப் போலவே ஆபாசங்களுக்கு அடிமைப்பட்டு விடும் விநோதங்களை அவருக்கே உரிய நடையில் இந்நூலில் சொல்லியிருக்கிறார். 
 
121 என்ற எண்ணைப் பெயராகக் கொண்ட வாகனம், தலையில் ஆண்டென்னா முளைத்த நபர் - என்று புதுமையான பாத்திரங்களை நூலில் சந்திக்க வைக்கிறார்.
 
தன் நூல்களை வெளியிட இசைவளித்த திரு.சுஜாதா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இவரது நூல்களைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
- பதிப்பகத்தார்.
 
திசை கண்டேன் வான் கண்டேன், உட்புறத்துச் 
செறிந்தவெலாம் பலப்பலவும் கண்டேன்யாண்டும் 
அசைவனவும் நின்றனவும் கண்டேன் மற்றும் 
அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன். 
                                                                 - பாரதிதாசன்.
 
எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன்)
 
தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக்  கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக  ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன. 
More Information
SKU Code TMN B 198
Weight in Kg 0.080000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சுஜாதா Sujatha
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:திசை கண்டேன் வான் கண்டேன் - சுஜாதா - Thisai Kanden Vaan Kanden - Sujatha - Thisai Kandaen Vaan Kandaen - Tisai Kandaen Van Kandaen

Similar Category Products