Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

உயர் கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம் Uyar Kalvi Yogamum Kairegai Vignanamum by Kanchi S Shanmugam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 310
₹73.00
ஜோதிட நூல்; கைரேகை சாஸ்திரம்; கைரேகை ஜோதிடம்.
 
காகித அட்டை; 
படிக்கக்கூடிய எழுத்துரு;  
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.
 

உயர்கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும் 

காஞ்சி எஸ்சண்முகம்

 

என்னுரை 

குரு வாழ்க !                                                                                                  குருவே துணை !!

 

பேரன்புடையீர், வணக்கம்.

 

ஒரு குழந்தை பிறந்து ஜாதகம் பார்க்கும்போது என் மகன் நீண்ட ஆயுளுடன் இருப்பானா?, என் மகள்  நீண்ட காலம் இருப்பாளா? என்ற கேள்வியைத் தொடர்ந்து அவர்கள் கேட்கும் கேள்வியே நன்றாகப்  படிப்பானா? டாக்டர் ஆவானா? எஞ்சினியர் ஆவானா? கலெக்டர் ஆவானா? அவனை ஜாதகப்படி என்ன படிக்கவைத்தால் அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று கேட்பவர்கள் எத்தனை, எத்தனை  பேர்?

 

அவர்களில் சிலர் 'நான்தான் சரியாகப் படிக்க முடியவில்லை. படிக்கும் காலத்தில் வறுமை,  நல்லாதான் படித்தேன். ஆனால் வறுமையின் காரணமாக பாதியிலேயே நிறுத்திட்டாங்க. அதுபோல  எனது மகனுக்கு எதுவும் வரக்கூடாது.

 

என் மர மண்டைக்குத்தான் எதுவும் சரியா ஏரல. இவனாவது படித்து நல்ல வேலைக்குப் போய் கஷ்டப்படாமல் இருப்பானா?

 

எனக்கு படிக்கிற காலத்தில் உடல் நிலை சரியில்லை. அடிக்கடி உடம்புக்கு எதாவது வந்து படிக்க  முடியாமல் ஒழுங்கா பள்ளிக்குப் போக முடியாமல் பாதியிலேயே படிப்பு நின்று போயிட்டு, அதுபோல இவளுக்கு ஏதும் வராதில்ல.

 

இவளை எப்படியும் நல்ல படிக்க வைத்து டாக்டர் ஆக்குவதுதான் என் இலட்சியம். எனவே, இவளது  ஜாதகப்படி அதுவரை எனக்கு நிரந்தர வருமானம், ஆயுள் நன்றாக இருக்குமா? என்று பார்த்து  சொல்லுங்கள் சார்.

 

நல்லாதான் படித்தாள். இவ வயதுக்கு வந்ததும் எங்க தொடர்ந்து படிக்க விட்டாங்க? கல்யாணம்  பண்ணிக் கொடு, கல்யாணம் பண்ணிக் கொடுன்னு தொந்தரவு செஞ்சு கல்யாணம் பண்ணாங்க. 21 வயதுக்குள் இரண்டு பிள்ளையைப் பெத்ததுதான் மிச்சம். இப்ப பணக்கஷ்டம் என்று புள்ளையைப் போட்டு அடிக்கிறான். ஒழுங்காப் படிச்சிருந்தால் இந்நேரம் இவளும் அவள் தோழி மாதிரி டீச்சர்  ஆகியிருப்பாள். நல்ல இடமா பார்த்து கல்யாணம் கட்டிக் கொடுத்திருப்பேன். அந்த பாக்கியம்தான்  இல்லையே! அப்படி அதுவும் இவள் பிள்ளைக்கு வந்துடாதில்ல?

 

இந்த கோர்ஸ்ல சேர்க்க வேண்டாம் என்று நான் அப்பவே சொன்னேன். யார் கேட்டாங்க? படித்துவிட்டு பத்து வருடமா வேலை இல்லாமல் ஏதோ ஒரு வேலையை பார்த்துக்கிட்டு இருக்கான். கல்யாணம்  பண்ணி 2 குழந்தைக்கும் அப்பாவாகிவிட்டான். இன்னும் அரசு வேலைதான் இல்லையே! இவன்  பிள்ளையாவது நல்ல படிச்சு உரிய காலத்தில் வேலைக்குப் போவானா? இப்படிக் கேட்பவர்கள்தான்  எத்தனை பேர் !

 

எனவே, சிறு வயதிலேயே ஒருவரது ஜாதகப்படி, கைரேகைப்படி எந்தெந்த கிரகங்கள் ஆதிக்கம்  செலுத்துகின்றன. ஆதிக்கம் செலுத்துகிற கிரகங்களுக்கு உரிய கல்வி எது? எந்தப் படிப்பில் ஈடுபாடுடன்படித்து உன்னத நிலையை அடைய இயலும். இவர்களுக்குள்ள இயற்கையான அறிவுடன் முறையான கல்வியினைக் கொண்டு பட்டை தீட்டி பிரகாசிக்க இயலும். அதன்மூலம் தங்களின் வாழ்க்கைத்  தரத்தினை உயர்த்தி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் செயல்பட இயலும் என்பதைக் கண்டறிய  முடியும்.

 

மேலும், உயர்கல்வி படிக்கின்ற காலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார  ரீதியாகவும் ஏற்படுகின்ற பிரச்சனைகள் எதிர்கொள்வது எவ்வாறு? உயர் கல்விக்கு உதவித்தொகை  கிடைக்குமா? வெளிநாடு சென்று படிக்க இயலுமா? ஆராய்ச்சிகள் செய்ய இயலுமா? என்பதை எல்லாம் கண்டறிந்து அவருக்குள்ள முழுத் திறமையையும் பயன்படுத்தி உன்னத நிலையை அடைந்து. அவரது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் முழுமையாக பயன்பட்டு நாட்டின் கல்வி வளத்தினை  மேம்படுத்தி உலக அரங்கில் உயர்ந்து நாடாக நம் தேசம் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற நோக்கில்  அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளும்படி மிக எளிமையான கைரேகை பட விளக்கங்களுடன்,  உதாரண ஜாதகங்களுடன் 'உயர் கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற நூலினை குரு  அருளாலும், இறையருளாலும் எழுதியுள்ளேன்.இந்த நூலினை எழுதுவதற்கு எண்ணத்தினைக்  கொடுத்த இறைவனுக்கு முதற்கண் நன்றியினைத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

 

இந்நூலில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் கல்வியால் உன்னத நிலையை அடைந்தவர்களின் கைரேகை மற்றும் ஜாதகங்களை ஆய்வு செய்து கண்டறிந்த உண்மைகளாகும். அவர்களுக்கும், இந்த நூல் வெளியாவதற்கு உதவியாக இருந்து வரும் அனைத்து அன்பர்களுக்கும்  நண்பர்களுக்கும்  நன்றி!

 

வாழ்க ஜோதிடக்கலை!                                                                  வாழ்க வளமுடன்!!

 

                                                                                                                                   காஞ்சி எஸ். சண்முகம்

 

 

 

பொருளடக்கம்:-

01. உயர் கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும் 

இரு கைகளையும் ஆராய வேண்டும் - 13; 

காலத்தால் மாறாத கைரேகை விதிகள் - 15; 

கிரக மேடுகளும் முக்கிய ரேகைகளும் படம் - 17.

 

02. புத்தி ரேகையும் உயர் கல்வி யோகமும் 

புத்தி ரேகையின் துவக்கமும் முடிவும் - 18; 

புத்தி ரேகையின் நீளம் - 28; 

புத்தி ரேகையின் ஏற்ற இறக்கங்கள் - 30; 

புத்தி ரேகையின் வகைகள் - 36; 

புத்தி ரேகையில் காணப்படும் குறிகள் - 43.

 

03. ஆயுள் ரேகையும் உயர்கல்வி யோகமும் - 48

 

04. இருதய ரேகையும் உயர்கல்வி யோகமும் - 56

 

05. விதி ரேகையும் உயர்கல்வி யோகமும் - 64

 

06. உண்மைச் சம்பவம் : 1 - 2 - 71

 

07. சூரிய ரேகையும் உயர்கல்வி யோகமும் - 80

 

08. கிரக மேடுகளும், உயர்கல்வி யோகமும்                                        

 

09. புதன் ஆதிக்கமும் உயர்கல்வி யோகமும் -  83

 

10. உண்மைச் சம்பவம் : 3 - 5  - 89 

 

11. செவ்வாய் மேடும் உயர் கல்வி யோகமும் - 100 

 

12. உண்மைச் சம்பவம் : 6 - 106

 

13. சந்திர மேடும் உயர் கல்வி யோகமும் - 111     

 

14. உண்மைச் சம்பவம் : 7 - 116

 

15. சுக்கிரனின் ஆதிக்கமும் உயர் கல்வி யோகமும் - 119

 

16. உண்மைச் சம்பவம் : 8 - 10  - 128

 

17. குரு பகவானின் ஆதிக்கமும் உயர் கல்வி யோகமும் - 140

 

18. உண்மைச் சம்பவம் : 11 - 12 - 146

 

19. சனி பகவானின் ஆதிக்கமும் உயர் கல்வி யோகமும் - 152

 

20. சூரியனின் ஆதிக்கமும் உயர் கல்வி யோகமும் - 157

 

21. உண்மைச் சம்பவம் : 13 - 163

 

22. சரஸ்வதி கடாட்சம் - 168

 

ஆசிரியர் குறித்து: கைரேகைக்கலை குறித்து படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள நூலை எழுதியுள்ளார் ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம். 

 

ஆசிரியர் பெயர்: செ.சண்முகம்; 

வயது: 50; 

கல்வித் தகுதி: B.Sc., M.A, B.Ed, S.D.T.D; 

பெற்றோர் : எஸ்.செல்வ கணபதி -இராஜலெட்சுமி; 

சொந்த ஊர் : வேதாரண்யம்; 

ஜோதிடபட்டங்கள் : ஜோதிஷ் ஞான சிரோன்மணி; ஜோதிஷ் சாம்ராட்; ஜோதிஷ் வித்வான் மணி; 

எழுதிய நூல்: கே.பி.ஜோதிடமும் செவித்திறன் குறையும் (ஒரு பாகம்); 

வீட்டு முகவரி: பிளாட் எண்.128, 172 A, பெரியார் சாலை, அன்னை இந்திரா நகர், புதிய இரயில் நிலையம் அருகில், காஞ்சிபுரம்-631502.

Ph. 9659632767.

More Information
SKU Code Bharti B 310
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம் Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:உயர் கல்வி யோகமும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம் Uyar Kalvi Yogamum Kairegai Vignanamum by Kanchi S Shanmugam

Similar Category Products





Other Books by ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம் Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam