Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வீடு, மனை, வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம் Veedu, Manai, Vaagana Yogamum Kairegai Vignanamum by Kanchi S Shanmugam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 313
₹69.00
ஜோதிட நூல்; 
கைரேகை சாஸ்திரம்; 
கைரேகை ஜோதிடம்.
 
மொழி: தமிழ்; 
காகித அட்டை; 
படிக்கக்கூடிய எழுத்துரு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

வீடுமனைவாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும் 

காஞ்சி எஸ். சண்முகம் 

 என்னுரை 

 

குரு வாழ்க!                                                                                                                  குருவே துணை!!

பேரன்புடையீர் வணக்கம். 

 

‘வீடு, மனை, வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும் ’ என்ற இந்த நூலினை எழுதிடும் வாய்ப்பு அளித்த  இறைவனுக்கு  முதற்கண்  நன்றி கூறி,  இந்நூலை எளிதியதற்கான நோக்கத்தையும் கூற  விரும்புகிறேன்.

 

என் மூதாதையர் வாங்கி வைத்துச் சென்ற இத்தனை ஏக்கர் நிலம்தான்  இன்றைக்கும் எங்களுக்கு இந்த ஊர்ல பணக்காரன் என்கிற அந்தஸ்தை  ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இன்றைக்கு நாங்கள் குடியிருக்கிற வீடு என் தாத்தா வாங்கித் தந்தது!, என் அப்பா வாங்கித் தந்தது! என் அம்மா பணி ஓய்வின்போது  கிடைத்த பணத்திலிருந்து வாங்கித் தந்த இடத்திலதான் வீடு கட்டி இருக்கிறேன். அவங்க மட்டும் வாங்கித் தரவில்லை என்றால் என்பாடு  திண்டாட்டம்தான்!

 

சேமித்த பணத்தை பேங்கில் போடு வச்சேன். காய்கறி, பாலுக்குக்கூட பேங்கில் இருந்து கிடைக்கிற வட்டிப்பணம் போதல.போட்ட பணம் அப்படியேதான் இருக்கிறது. இதே தொகையில ஒரு இடத்தை  வாங்கிப் போட்டிருந்தா இன்றைக்கு பல லட்சங்கள் போகும். நானும் கோடீஸ்வரன் என்று மார்தட்டி சொல்லிக் கொள்ளலாம். அந்த யோகம்  எனக்கு இல்லையே! என்று என்னிடம் அங்கலாய்ப்பவர்கள் பலர். 

 

அன்றைக்கு என்னிடம் பணம் இல்லை. GPF லோன் போட்டு இடத்தை வாங்கி, LICயிலே லோன் போட்டு வீட்டைக் காட்டினேன். இன்றைக்கு வாழ்க்கையில் சந்தோசமாக  இருக்கிறேன். அன்றைக்கு  விளையாட்டா என் பொண்ணுக்கு ஒன்று, பையனுக்கு ஒன்று என்று இரண்டு மனை வாங்கிப்  போட்டேன். அதை விற்று இன்றைக்கு என் பையனை டாக்டருக்கு படிக்க வைத்து விட்டேன்,  இஞ்சினியருக்குப் படிக்க வைத்து விட்டேன். என்  மகளை படிக்கவைத்து, திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்.' என்று மகிழ்பவர் பலர். 'அன்றைக்கு இந்த இடத்தை வாங்கச் சொல்லியதால்தான் வாங்கினேன். கடவுள் போல அன்றைக்கு  எனக்கு நீங்கள் தான் ஆலோசனை சொன்னீங்க! கஷ்டத்தோடு கஷ்டமாக வாங்கிப் போட்டேன்.  அதுதான் இன்றைக்கு என் வாழ்க்கைத்  தரத்தையே மாற்றிவிட்டது சார்.' 

 

நீங்கள் என்னதான் சம்பாதிச்சீங்க? எங்களுக்கு ஒரு மனை கூட வாங்கி வைக்கலியே,  இன்றைக்கு  வாடகை வீட்டுக்குத்  தெருத்தெருவா அலையிறோம்' என்று பெற்றோரைப் பார்த்துக் கேட்கும் பிள்ளைகள், 'எவ்வளவுதான் உழைத்தாலும்  வாழ்நாளில் எந்த சொத்துமே இல்லை. ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்று  எங்கள் வாழ்க்கை முடியாபோவுது. நல்லாதான் சம்பாதிச்சோம். அன்றைக்கு இந்த இடம் ஒரு சதுர அடிவெறும் 50 ரூபாய்தான். வாங்கிப் போட்டிருந்தால் இன்றைக்கு எத்தனை கோடியோ! ஆனால்  சம்பாதித்தோம், தாராளமா செலவு செய்தோம், அவ்வளவுதான் என்று ஏங்குவோரும் இருக்கிறார்கள்.  

 

இப்படி நமது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும், அங்கலாய்ப்பான வாழ்க்கைக்கும் காரணம் என்ன?  சரியான காலத்தினைக்கண்டறிந்து, திட்டமிட்டு ஒரு காரியத்தை செய்வதைச் சார்ந்தே நமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.  அப்படிப்பட்ட சரியான காலத்தினைக் கண்டறிந்து திட்டமிட்டு காரியத்தைச் செய்ய கைரேகைக்கலை உதவி செய்கிறது. ஜாதகத்தின்முலம், கைரேகை மூலம், நமது எதிர்காலத்தினை அறிவதால் மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன் அந்த  செயலை செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம்.

 

சாதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வயதில் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது என்பதை  கைரேகை மூலமாக  அறிந்து கொண்டால் அதனை வாங்குவதற்கு தேவையான பணத்தை அதுவரை பாதுகாப்பாக வங்கியில் சேர்த்து  வைக்கலாம். நம் கனவு இல்லத்தினை சாஸ்திரப்படி எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை முன்கூட்டியே  திட்டமிட்டு சிறிது சிறிதாக நமது சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம். 

 

வீடு கட்டுவதற்குறிய பிளானை சரியாகத் தயார் செய்து, கட்டுவதற்கு உரிய பொருள்களை எங்கு  வாங்கினால் விலை  குறைவாகவும், நல்ல தரமாகவும் கிடைக்கும் என்ற விவரத்தையும் யோசித்து வைத்துக் கொள்ளலாம். வீடு கட்டும்  பில்டர்களைப் பற்றியும், நமக்கு உகந்த நபர் யார் யார்? என்பதை குறித்த விவரங்களையும் சேகரித்து வைக்கலாம். நாம் வாங்கும் இடத்தின் தன்மை, அந்த இடத்தைப் பற்றிய உண்மை விவரங்களை  சரிபார்த்துக் கொள்ளலாம். 

வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அவரது ஜாதகப்படியோ, கைரேகைப்படியோ இல்லை எனத் தெரிந்து கொண்டால் மனதினை திடப்படுத்திக் கொண்டு மாற்று வழியாக குடும்பத்தில் மனைவி  பெயராலோ அல்லது  குழந்தைகள் பெயராலோ வாங்கலாமா? என்பதையும் ஆராய்ந்து வாங்கலாமே!

 

எனவே, சரியான யோக காலத்தினை கைரேகை மூலம் கண்டறிந்து வீடு, மனை, வாங்குவது யோகம். அந்த யோகம்  உங்களுக்கு கிடைக்க வேண்டும். அப்படி யோக (அதிர்ஷ்ட) காலத்தில் நீங்கள் சேர்த்து வைக்கும்  சொத்தினால்...

 

வரலாற்று நாயகர்களாகிய மா மனிதர்களே! நீங்களும் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளு தாத்தாவாக, மூதாதையராக  ஆகலாம். ஏன், நீங்கள் ஏழு தலைமுறையினர் போற்றும் தெய்வமாக மாறுவீங்க!

 

அதுபோல, இலட்சிய பெண்மணிகளே! இந்தியாவை உலகின் பொருளாதாரத்தில் முதல்தர நாடக  உயர்த்த இருக்கும்  கண்மணிகளே! நீங்களும் அம்மாவாக, பாட்டியாக, கொள்ளு பாட்டியாக, மூதாதையராக மாறுவீங்க.  ஏன், ஏழு  தலைமுறையினர் போற்றும் கடவுளாகக்கூட வணங்கப்படலாம்! அப்படி நீங்கள் போற்றி புகழப்பட  வேண்டும் என்ற நோக்கில்தான் எனது 35 வருட கைரேகை ஆராய்ச்சியை நூல்களாக மாற்றி உங்கள் முன் சமர்ப்பித்து வருகிறேன். 

 

இந்த நூல் வெளியாவதற்கு உதவியாக இருந்து வரும் அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும்,  அச்சிட்டு வருகின்ற சிவகாமி பிரிண்டர்ஸ் உரிமையாளருக்கும், எனது குருநாதர் ஜோதிட சக்கரவர்த்தி K. ஹரிஹரன் அவர்களுக்கும் நன்றி! 

 

வாழ்க ஜோதிடக்கலை ! வாழ்க நமது பாரதம் !! வாழ்க நமது தமிழகம் !!! 

 

                                                                                                                                  காஞ்சி எஸ். சண்முகம்

பொருளடக்கம்:  

1. வீடு, மனை, வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும் 

இரு கைகளையும் ஆராய வேண்டும்  - 13; 

இருவர் கைகளையும் ஆராய வேண்டும்  - 15

காலத்தால் மாறாத கைரேகை விதிகள்  - 16

 

2. முக்கிய ரேகைகளும் வீடு, மனை யோகமும் 

விதி ரேகையும், வீடு, மனை யோகமும்  - 19; 

உண்மைச் சம்பவம் : 1- 2  - 30

புத்தி ரேகையும், வீடு, மனை யோகமும்  - 39

சூரிய ரேகையும், வீடு, மனை யோகமும்  - 43

உண்மைச் சம்பவம் : 3  - 50

ஆயுள் ரேகையும், வீடு, மனை யோகமும்  - 55

உண்மைச் சம்பவம் : 4  - 60.

 

3. கிரக மேடுகளும் வீடு, மனை யோகமும் 

செவ்வாய் ஆதிக்கமும் வீடு, மனை யோகமும் - ஒரு ஆய்வு  - 66

உண்மைச் சம்பவம் : 5  - 72

சந்திரனின் ஆதிக்கமும் கனவு இல்லமும்  - 77

சுக்கிரனின் ஆதிக்கமும் ஆனந்த இல்லமும்  - 81

குருவின் ஆதிக்கமும் இலட்சிய இல்லமும்  - 87

சனி பகவானின் ஆதிக்கமும் காலத்தால் மாறாத அதிசய கட்டிடங்களும் - 91

சூரியனின் ஆதிக்கமும் புகழ்வாய்ந்த இல்லமும்  - 97

உண்மைச் சம்பவம் : 6  - 101

புதனின் ஆதிக்கமும் வணிக இல்லமும்  - 106

உண்மைச் சம்பவம் : 7 - 8  - 110.

 

4. கிரக மேடுகளும் வாகன யோகமும் 

சுக்கிரனின் ஆதிக்கமும் வாகன யோகமும்  - 122

உண்மைச் சம்பவம் :  - 128

குரு பகவானின் அருட்பார்வையும் வாகன யோகமும்  - 131

சனி பகவானின் ஆதிக்கமும் வாகன யோகமும்  - 134

சூரிய பகவானின் ஆதிக்கமும் வாகன யோகமும்  - 138

புதனின் ஆதிக்கமும் வாகன யோகமும்  - 141

உண்மைச் சம்பவம் : 10  - 144

செவ்வாய் ஆதிக்கமும் வாகன யோகமும்  - 150

சந்திரனின் ஆதிக்கமும் வாகன யோகமும்  - 152

உண்மைச் சம்பவம் : 11  - 155.

 

ஆசிரியர் குறித்து: கைரேகைக்கலை குறித்து படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள நூலை எழுதியுள்ளார் ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம். 

 

ஆசிரியர் பெயர்: செ.சண்முகம்; 

வயது: 50; 

கல்வித் தகுதி: B.Sc., M.A, B.Ed, S.D.T.D; 

பெற்றோர் : எஸ்.செல்வ கணபதி -இராஜலெட்சுமி; 

சொந்த ஊர் : வேதாரண்யம்; 

ஜோதிடபட்டங்கள் : ஜோதிஷ் ஞான சிரோன்மணி; ஜோதிஷ் சாம்ராட்; ஜோதிஷ் வித்வான் மணி; 

எழுதிய நூல்: கே.பி.ஜோதிடமும் செவித்திறன் குறையும் (ஒரு பாகம்); 

வீட்டு முகவரி: பிளாட் எண்.128, 172 A, பெரியார் சாலை, அன்னை இந்திரா நகர், புதிய இரயில் நிலையம் அருகில், காஞ்சிபுரம்-631502.

Ph. 9659632767.

More Information
SKU Code Bharti B 313
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம் Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:வீடு, மனை, வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும் - காஞ்சி எஸ். சண்முகம் Veedu, Manai, Vaagana Yogamum Kairegai Vignanamum by Kanchi S Shanmugam

Similar Category Products





Other Books by ஜோதிட ரத்னா மற்றும் கைரேகை நிபுணர் காஞ்சி எஸ் சண்முகம் Jothida Rathna Palmistry Kanchi S Shanmugam