Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

En Anbu Kaadhala - என் அன்புக் காதலா - என் அன்பு காதலா

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 083
₹160.00

குடும்ப கதை / குடும்ப நாவல்.  

பேப்பர்பேக்/ காகித அட்டை உறை; 

368 பக்கங்கள்;  

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: டிசம்பர், 2001; 

நான்காம் பதிப்பு: அக்டோபர், 2014.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

திருமணமாகி தனிக்குடித்தனம் செய்ய வெளிதேசம் போகும் என் அன்பு மகள் சௌபாக்கியவதி ஸ்ரீ கௌரி கணேசனுக்கு இந்த நூல் அன்புப்பரிசு, ஆயிரம் கட்டி வராகன் எடையுள்ள திருமணச்சீர்...என்று எழுதிய கதை.

 

எது கண்டும் எப்போதும் அஞ்சாத கோபமொன்று சுப்ரமணியத்திடம் உண்டு. 

 

சருமதிதான் பயப்படுவாள். "எதுக்கு இப்படிப் பிரச்னையைப் பெரிசு பண்றேள்.? கொஞ்சம் அமைதியா இருக்கக் கூடாதா?"

 

"எப்போ அமைதியா இருக்கணுமோ, அப்போ இருக்கணும். எப்போ கோபப்படணுமோ அப்போ கோபப்படணும். கோபப்படாமல் இருந்தால் முட்டாள்னு நினைச்சுடுவாங்க. சாருமதி பயப்படாத. பிரச்னையை என்கிட்டே விடு. இதனால அவமானம் வரலாம். அவமானத்த தாங்கறதுக்கு எனக்கு தெரியும். எப்படி அவமானப்படுத்தறதுன்னும் எனக்குத் தெரியும்." தெளிவாக பிரச்னையில் குதிப்பார்.

 

அப்படி குதிப்பதற்கு சாருமதிக்கு தைரியம் வந்ததே இல்லை. 

 

ஏன்? சுப்ரமணியத்தை கேள்வி கேட்பதற்கு இந்த வீட்டில் யாரும் இல்லை. ஆனால், தன்னைக் கேள்வி கேட்பதற்கு சுப்ரமணியம் இருக்கிறார். அப்படி சுப்ரமணியம் கேள்வி கேட்டால் அதுகுறித்து தெளிவாக பதில் சொல்ல சாருமதிக்கு என்றுமே தெரிந்தது இல்லை.

 

"என்ன இன்னிக்கு பட்டுப்புடவை கட்டிண்டு இருக்கற?"

 

"வெள்ளிக்கிழமை. அதனால கட்டிண்டிருக்கேன்."

 

"வெள்ளிக்கிழமை அன்னிக்கு பட்டுபுடவைதான் கட்டிக்கணுமா?"

 

"அப்படி ஒன்னும் இல்ல. வெள்ளிக்கிழமை. அதனால பட்டுப்புடவை கட்டிண்டிருக்கேன்."

 

"இல்லை சாருமதி. ஏன் வெள்ளிக்கிழமை பட்டுப்புடவை கட்டிக்கிற?"

 

"எல்லாரும் கட்டிக்கிறா. அதனால நானும் கட்டிக்கறேன்."

 

"இப்படி இருக்காத சாருமதி. வெள்ளிக்கிழமை பட்டுப்புடவை கட்டிக்கிறதுக்கு ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடி. இன்னிக்கு நல்ல நாள். நான் பூஜை பண்ணப் போறேன். பட்டுப்புடவை கட்டிண்டு பூஜை பண்ணா நல்லது. இப்படி ஏதாவது சொல்லு. சும்மா அர்த்தமில்லாத ஒரு காரியம் பண்ணாத சாருமதி. நான் கேட்கறதுக்காக நீ பண்ண வேண்டாம். நீ கேள்வி கேட்டுக்கோ. நீயே பதில் சொல்லிக்கோ.

நாம பண்ற பல காரியங்கள் எந்த அர்த்தமும் இல்லாத இருக்கு. குறிப்பா உன்னை மாதிரி பொம்மனாட்டிங்க பண்ற பல காரியங்கள்ல நிறைய முட்டாள்தனம் கலந்துருக்கு. சரியான காரணம் வச்சுக்கிட்டு செய்யறபோது காரியமும் முழுசா, நிறைவா இருக்கும். சரியா செய்யணுங்கற நம்பிக்கையும் ஏற்படும். நீ எது கேட்டாலும் உளர்றதுக்கு என்ன காரணம் தெரியுமா? என்ன செய்யணும்னு தெரியாமலே செய்யறதுதான்."

 

 

ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

More Information
SKU Code TMN B 083
Weight in Kg 0.060000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:En Anbu Kaadhala - என் அன்புக் காதலா - என் அன்பு காதலா

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran