Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இது போதும் - பாலகுமாரன் IDHU PODHUM by Balakumaran

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 153
₹430.00
நாவல்கள்.
 
பேப்பர்பேக்; 
440 பக்கங்கள்; 
முதற் பதிப்பு: நவம்பர், 2015; 
ஆறாம் பதிப்பு: ஜனவரி, 2020. 
 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

About Spirituality. 
 
நம்மால் எதைப்பற்றியும் சொல்லாமல் இருக்க முடியாது. பகிராமல் வாழ முடியாது. நேற்று ஒரு கனவு கண்டேன் என்பதும், இன்றைக்கு எங்கள் வீட்டில் இந்த உணவு என்பதும், எப்போதும் நான் வெள்ளை உடைகள் தான் அணிகிறேன் என்பதும் நம்மால் நெருங்கியவரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. 
 
அதை போலவே நான் இடையறாது என்னை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். என் மனதை உள்மனதை கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லத் தோன்றும். உங்களுடைய இந்த விஷயம் உடைபட்டு போவதற்கு இது முக்கிய காரணமாக அமையும். ஏனெனில் இதைப்பற்றி உடனடியாக ஏதேனும் ஒருகருத்து சொல்வார்கள். எதற்கு வெள்ளை உடை அணிகிறாய். கருப்பு உடை தான் நல்லது என்று சொல்வார்கள். இதோடு நீண்ட தாடியும்.
 
இது போதும் என்கிற இந்த ஆன்மீக, என் அனுபவ விஷயத்தை ஒரு கட்டளையாகத்தான் நிறைவேற்றியிருக்கிறேன். 
 
என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் வழிகாட்டலாக இது வெளிவந்திருக்கிறது.
 
இந்த கருத்துக்களை பகவான் ரமணர், ஜேகேயிடம் படித்திருக்கிறேனே என்று சிலர் நினைக்கலாம். உண்மை ஒரு மாதிரி தான். ஒரே விதமாகத்தான் சொல்ல முடியும். அதே சமயம் இப்பெரியோர்களின் புத்தகத் தாக்குதல் என்னிடம் உண்டு. 
 
என் குரு யோகி ராம்சுரத்குமாரிடம் இவை பேசப்பட்டு அவரால் விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் அவரால் குண்டலினி எழுப்பல் என்னுள் நிகழ்ந்ததையும் அதுபற்றி எழுத இங்கு முயற்சித்திருக்கிறேன்.
 
இது உண்மை கூறும் சிறு முயற்சி. பாதை காட்டும் கைகாட்டி. குழந்தையை படியேற உதவும் கவனம் போன்ற அன்பு. நேசக்கரம். என் அப்பனே, என் தங்கமே, ஏன் அழுகிறாய், கவலை விடு. பரத  கண்டத்து சொத்து வேத வேதாந்தங்கள். அவை சமுத்திரம். அந்தத் தெளிவு நோக்கி போக, பல ஜென்மங்கள் நடக்க இதோ இந்த நாடிசுத்தி ஒரு சிறு உதவி. ஆரம்பம். முதல் வகுப்பு. இது தெளிந்த பிறகு வரும் திகைப்புகள் ஏராளம். ஆனால் அவைகளை நீயே பகுத்தறிவாய். உன்னால் இயலும் என்கிற உத்திரவாதம். உன் கவலைகளை நீயே தீர்க்கும் வழி.
 
உன் 
தாய் தந்தை தராத, ஆசிரியர் தராத இந்த உத்திரவாதம் ஒரு உயர் குருவினால் தரப்படும்.
 
இது எனக்குத் தரப்பட்டது. நான் கைமாற்றியிருக்கிறேன்.
 
என்னால் உங்கள் குண்டலினியை எழுப்ப முடியாது போகலாம். ஆனால் குண்டலினி என்று ஒன்று உண்டு. அது இன்னவிதம், இவை செய்யும் என்று தெளிவுறுத்தியிருக்கிறேன். இடையறாது நாடிசுத்தி செய்து சிறந்திருக்கிறேன். அதைச் சொல்லியிருக்கிறேன். 
 
இதைப் படியுங்கள். படித்து தெளியுங்கள். படிப்பதும் தெளிவதும் உங்கள் பாடு. உங்கள் கர்மா. உங்கள் தலையெழுத்து.
 
மாணிக்கக் கல் குரங்கிடம் கிடைத்தால் கடித்து பார்த்துவிட்டு உமிழ்ந்து எரியும். மனிதரிடம் கிடைக்க நல்ல பதக்கமாகும். கிரீடத்தில் இருக்கும். ஆனால் இப்போது தவறவிட்டால் அடுத்த ஜன்மாவில் வரலாம். மனம் எளிதில் இறக்காது. மறுபடி பிறக்கவே ஆன்மாவுடன் பயணமாகும். இதைத் தொட்டால் போதும் மனம் இதோடு நட்பு கொள்ளும்.
 
விட்ட குறை தொட்ட குறை என்பது இதுதான். படிக்காது விட்ட குறை படிக்க வேண்டும் என்ற தொட்ட குறை தொடரும்.
 
இதை ஆழ்மன நிலையிலிருந்து சொல்கிறேன்.
 
 
பொருளடக்கம்: 
1.இது போதும் 
2.கடவுளைத் தேடி 
More Information
SKU Code TMN B 153
Weight in Kg 0.050000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM
Write Your Own Review
You're reviewing:இது போதும் - பாலகுமாரன் IDHU PODHUM by Balakumaran

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran