Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

காதற் பெருமான் -காதற் பெருமான் - Kaadhar Perumaan - Kathar Peruman - Kaadar Perumaan Kaadhar Perumaan Kathar Peruman Kaadar Perumaan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 032
₹255.00
இரண்டு நாவல்கள்:
1.காதற் பெருமான்  - ஆன்மீக புதினம், ஆன்மீக நாவல், சமய பக்தி சார்ந்த நாவல், அருணகிரிநாதர் சரித்திரம்;  
2.வாலிப வேடம் - குடும்ப நாவல், குடும்ப புதினம். 
 
காகித அட்டை;
256 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: டிசம்பர், 1998; 
நான்காம் பதிப்பு: நவம்பர், 2013.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

காதற் பெருமான்: 
அருணகிரிநாதர் புராணம். காதற்பெருமான்' நன்றாய் வந்திருக்கின்றது. உங்களுக்கே உரித்தான ஆரம்பம். மூன்றாவது அத்தியாய முடிவில் உங்களுக்கே உரிய வார்த்தைகள் (அந்த அனுபவம் அவனை வந்து வந்து தாக்கியது.) 
 
சம்பவக் கோவை கடவுள் மனம் எண்ணம் இவைகளை தாண்டி ஐந்துவித உடலை வெகு எளிதாய் புரிய வைத்தது. 'சும்மா இரு' என்ற இரண்டு சொல்லை உதாரணத்துடன் கையாண்ட விதம்', எனப் பலது மனதை தொட்டன. "அரசனுக்கு நாக்கு இழுத்துக் கொண்டது. அவன் வலக்கையை உயரே தூக்கி இடக்கையை நெஞ்சின் அடியே வைத்து விநோதமாய் சப்தமெழுப்பினான். சிலர் குளிர்ஜுரம் வந்ததுபோல் நடுங்கினார்கள். மறுபடியும் "அதல சேடனார் ஆட" என்று அருணகிரிநாதர் பாட கூட்டமும் அவரோடு பாடியது."
 
வாலிப வேடம்: 
உன்னை மருமகளா ஏத்துக்க பரிபூரண சம்மதம். உனக்கு என்ன வேணுமோ அதை நீ கொண்டு வந்துக்கோ. முரளி ரொம்ப நல்லவன். எந்த கெட்ட வழிக்கும் போகாத பையன். கெட்டவனா இருக்கக்கூடாதுன்னு சங்கல்பம் வச்சிண்டிருக்கற பையன். அவன் கண்ணுல எப்பவும் உண்மை நிக்கும். அவனுக்கு பொய் தெரியாது. சொல்ல முயற்சி பண்ணாலும் முழுக்க சொல்ல முடியாது. அவனை ஜாக்கிரதையா பார்த்துக்கோ."
 
"வா, உங்க வீட்டுக்குப் போகலாம்!" அப்பா அவளை அழைத்துக் கொண்டு படியிறங்கினார்.
 
முரளி கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டான். மறுபடியும் மயக்கம் போலும் தூக்கம் வந்தது.
 
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
More Information
SKU Code TMN B 032
Weight in Kg 0.050000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM
Write Your Own Review
You're reviewing:காதற் பெருமான் -காதற் பெருமான் - Kaadhar Perumaan - Kathar Peruman - Kaadar Perumaan Kaadhar Perumaan Kathar Peruman Kaadar Perumaan

Similar Category Products