Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கரையோர முதலைகள் - பாலகுமாரன் - Karaiyora Mudhalaigal - Balakumaran - Karayora Muthalaigal - Karaiora Mudhalaikal - Kharaiyora Muthalaikal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 035
₹220.00

குடும்ப கதை/ குடும்ப நாவல்/ புதினம். 

காகித உறை/ பேப்பர்பேக்; 

320 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: ஜூலை 1985; 

பதிநான்காம் பதிப்பு: ஜனவரி, 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான்.
 
வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான்.  தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும்.  நேரம்தான்.  இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம்.
 
நிறைய பேர் விடியலைத்தான் நல்ல நேரம் என்கிறார்கள்.  விடியல் என்பது சற்று அமைதியானது.  சந்தோஷம் துக்கம் ஏதுமற்றது.  நிதானமானது. காதலியின் திருமணத்தை நடத்தி வைக்கும் காதலனின் கதை. 
 
"புலிகளைப் போல முதலை 
மான்களைத் துரத்திப் போகா 
காக்கைகளைப் போல எச்சல் 
இலைகளை நோட்டம் போடா 
எலிகளோ, ஈசல் கொல்லும் 
பல்லியோ அல்ல முதலை 
கழுத்துவரை நீரில் அமர்ந்து 
கரையோரம் பார்த்திருக்கும் 
வேட்டைக்கு எறும்பு போகும் 
புல்வெளியில் ஆடு மேயும் 
உலகத்து உயிர்கள் எல்லாம் 
உணவுக்கு பேயாய் பறக்க 
வீட்டினில் இரையைத் தேடி 
ஏங்குவது முதலை மட்டும் 
ஒரு இலை விழுந்தால் கூட 
முதலையின் முதுகு சிலிர்க்கும் 
ஒரு சுள்ளி முறிந்தால் கூட 
முதலையின் முகவாய் நிமிரும் 
ஒருமுறை சிக்கினாலும் 
உயிர் கொல்லும் போராட்டம் 
சக்கரம் அறுத்த போதும் முதலைகள் பிடியைத் தளர்த்தா. 
ஒரு அந்தணக் குழந்தை கேட்க 
முதன் முதலாய் முதலை விட்டது. 
பின் மனிதரை வளர்த்ததெல்லாம் 
நீர் முதலை வழங்கிய வேதம்." 
 
"பாசுரம் ஒன்றை கதை நாயகி ஸ்வப்னாவிடம் நாயகன் தியாகு சொல்வதாக வரும் பாடல் 
வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே"
.
புத்தக விமர்சனம்: வாசகர் கடிதம்
உங்கள் 'கரையோர முதலிகள்' படிச்சுட்டு மலைச்சுப் போறேன். இத்தனை தெளிவா தீர்க்கமா எழுதறபோது இதுல விமர்சிக்க என்ன இருக்குன்னு தோன்றது. ஆனா ஒவ்வொரு வாரமும் படிச்சப்புறம் ஏதாவது ஒரு வரி அல்லது விவரிப்பைப் பற்றி நீளமா யோசிச்சிண்டிருப்பேன். தியாகு பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலை. கத்துக் கொடுன்னுதான் கேக்கத் தோன்றது. நிறைய உங்களோட எழுத்துலேர்ந்து கத்துண்டுதான் இருக்கேன்.
 
முதலடி வாங்கியவன் 
முடிவுக்கு அஞ்சுவதில்லை வாங்கும் வரைதான் 
வாதங்கள் 
வாங்கிய பின் அனைத்தும் 
வேதங்கள்.
 
- கமலா 
கோட்டையூர்.

ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

More Information
SKU Code TMN B 035
Weight in Kg 0.070000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM
Write Your Own Review
You're reviewing:கரையோர முதலைகள் - பாலகுமாரன் - Karaiyora Mudhalaigal - Balakumaran - Karayora Muthalaigal - Karaiora Mudhalaikal - Kharaiyora Muthalaikal

Similar Category Products