Details
பாலகுமாரன் முன்னுரையில் இந்த கதை கொங்கு மண்டலத் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பகிர்ந்த சொந்தக் கதை என்று குறிப்பிட்டுள்ளார் "இனிய ஸ்நேகிதங்களுக்கு வணக்கம். வாழிய நலம். சின்ன வயதில் காதலில் தோற்று பின்னால் வென்ற கதை.
இந்தப் பொய்மான் ஒரு உண்மைக் கதை. சம்பவங்களும், சம்பவங்களின் தொடர்பாக ஏற்பட்ட மன ஓட்டங்களும் அப்பட்டமான நிஜம். அங்குலம், அங்குலமாக எனக்குச் சொல்லப்பட்ட வாழ்க்கை. எனக்கு இந்தக் கதை சொல்லப்படுகிறபோது இந்தக் கதையில் ஏற்பட்ட அவமானங்களும், துக்கங்களும் மிக எளிமையாக சிரிப்போடு சந்துஷ்டியோடு எனக்கு சொல்லப்பட்டன. அவமானத்தை உறிஞ்சி வளர்ந்து பெரிய மலராய் மலர்ந்து சந்தோஷத்தில் பரிமாறப்பட்டது. அவமானம் இல்லையெனில் நான் மிகச்சாதாரணமாகவே இருந்திருப்பேன் என்று விவரிக்கப்பட்டது.
-பாலகுமாரன்