Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Sakthi - சக்தி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 082
₹60.00
ஆன்மீகம். 
 
பக்கம் : 120; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: டிசம்பர், 2001; 
மூன்றாம் பதிப்பு: நவம்பர், 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

உலகம் உயிர்ப்போடும்¸ பொலிவோடும் இருக்கட்டும். பிரபஞ்ச மகாசக்தி இந்த குழந்தையை அணைத்து இடையறாது சீராட்டட்டும். சத்தியம் எங்கும் உள்ளது. அது இருக்கும் இடம் பிரகாசிக்கட்டும்.
 
சாக்தம் என்கிற இந்தக்கட்டுரையை எழுதுவதற்கு முன்னால் ஒரு கதை சொல்ல விரும்புகின்றேன். இவர் யார்¸ எங்கிருக்கிறார். எப்பொழுது இருந்தார் என்றெல்லாம் கேட்க வேண்டாம். ஒட்டு மொத்தமாய் இந்துமத வாழ்க்கையை கவனித்துப் பார்த்ததிலிருந்து ஒரு கால கட்டத்தில் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும் என்று அனுமானித்ததில் எழுந்தது இந்தக் கதை......
 
தனியே உட்கார்ந்து மந்திர ஜபம் செய்து செய்து உருவேற்றி மந்திர ஜபத்தோடு மிக நெருங்கிய பழக்கமுள்ளவர்கள் ஹோமம் செய்கிறபொழுது, அந்த ஹோமம் மிகச்சிறப்பை அடைகிறது. அப்படி மிகச்சிலரே இருக்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை.
 
செயல் என்று வந்த பிறகு அதற்கு ஒரு நியதி வேண்டுமல்லவா, நடனம் என்று வந்த பின்னால் ஒரு மேடை, பாடகர்கள், வாத்தியக்குழு என்றொரு அமைப்பு வேண்டுமல்லவா. எடுத்தவுடன் கணபதி வழிபடு பிறகு நடராஜர் வணக்கம் என்று ஒரு முறை இருக்கிறதல்லவா. அப்படி இந்த ஹோமத்திற்கும் முறைகள் இருக்கின்றன.
 
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்கின்ற முறையில் மனம் லயிக்காது. இடத்தை சுத்தம் செய்து, வருகிறவர்களை தேர்ந்தெடுத்து, ஹோம குண்டங்களை மந்திரம் சொல்லி புத்துயிர் ஊட்டி அவைகளைப் புனிதப்படுத்திப் பிறகு விடியலில் எந்த பரபரப்புமின்றி வேறு எந்த கவனமுமின்றி வெகு நிதானமாக சகல திரவியங்களும் மிக அருகே இருக்க, அந்த திரவியங்களை கொண்டுவா என்று சொல்வதற்குக்கூட முயற்சி செய்யாமல் அவை அனைத்தும் மிக அருகே இருக்கும்படியாக வைத்துக்கொண்டு, வேறு பேச்சுக்கள் இல்லாமல், வேடிக்கையான சிந்தனைகள் இல்லாமல் முழு மனதாய் ஹோமம் செய்கிறபொழுது மந்திரஜபம் பலநூறு மடங்கு பலமடைகிறது.
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
More Information
SKU Code TMN B 082
Weight in Kg 0.020000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Sakthi - சக்தி

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran