Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

விருப்பமில்லாத் திருப்பங்கள்- சுஜாதா - Viruppamillath Thiruppangal- Sujatha - Virupamillad Tirupangal - Virupamillat Thiruppankal - Viruppamillatha Dhiruppangal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 205
₹90.00
மர்ம நாவல்கள் / மர்ம புதினங்கள்.
 
காகித அட்டை/ பேப்பர்பேக்;  
168 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: மார்ச், 1983; 
ஐந்தாம் பதிப்பு: மார்ச், 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இரண்டு புதினங்கள்: 
1. விருப்பமில்லாத் திருப்பங்கள் - 105 பக்கங்கள்; 
2. கை - 106 பக்கங்கள் இருந்து 168 பக்கங்கள் வரை.
 
விருப்பமில்லாத் திருப்பங்கள்:
ஒரு ஆசாமி சொந்தமாகக் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத்தான் மார்க்கு போடுவேன்.  என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்தினேன்?  நல்லாத்தானே படிச்சுகிட்டு இருந்தேன்.  சொல்றேன். அதும் பின்னால கிராமத்தில, ஒருவிதமான ஸெமி கிராமத்தில் ராஜாவீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருந்தவன் இங்க வந்து என் வயசுக்கு பார்க்கக்கூடாத காட்சிகள் எல்லாம் பார்த்தாச்சு.
 
இவ்வாறு தொடங்கி விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.  
 
கை: தன்னம்பிக்கை, எச்சரிக்கை, தணிக்கை, இருக்கை போன்ற வார்த்தைகளின் எண்ணிக்கை இந்தக் கதையில் அதிகமாக இருந்தால் சிலேடை நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதை வாசகர்களுக்கு அமெரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கதை சிவத்தம்பியைப் பற்றியது. சிறப்பாக அவன் கைகளைப் பற்றியது. முதலில் சிவத்தம்பி, வயது முப்பதாக வில்லை. இருபத்து மூன்றில் பால்டிப்போவில் தற்காலிக வேலையின் பிரகாசத்தில் கல்யாணம் கட்டி கொடுத்து விட்டார்கள் (மங்களா). கல்யாணம் ஆன சூட்டோடு சர்க்கார் விளம்பர வற்புறுத்தல்கள் விளங்குவதற்குள் மனைவி உண்டாகி (ரோகிணி). ரோ - அப்படித்தான் குழந்தையை கூப்பிடுகிறான். பிறந்த அதிர்ஷ்டம் டிப்போ வேலை போய்விட்டது. "மூணு மாசம் கழிச்சி வாங்க தம்பி. திரியும் வேக்கன்ஸி வந்தா சொல்றோம்."
 
எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன் )
 
தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக்  கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக  ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன. 
More Information
SKU Code TMN B 205
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சுஜாதா Sujatha
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:விருப்பமில்லாத் திருப்பங்கள்- சுஜாதா - Viruppamillath Thiruppangal- Sujatha - Virupamillad Tirupangal - Virupamillat Thiruppankal - Viruppamillatha Dhiruppangal

Similar Category Products