Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இனிது இனிது காதல் இனிது பாகம் -2 - பாலகுமாரன் - Inidhu Inidhu Kaadhal Inidhu 2 - Balakumaran - Inithu Inithu Kadhal Inithu Enidhu Enithu Paagam 2 Part 2 Kathal Kaathal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 059
₹135.00
காதல் தொடர் சிறுகதைகள்.
 
காகித அட்டை / பேப்பர்பேக்; 
264 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஆகஸ்ட், 1998; 
ஐந்தாம் பதிப்பு : ஜூலை, 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

புத்தகத்திலிருந்து:-
 
"அவ ஒன்னும் எனக்குத் தேவையில்லை. அவதான் வேணும்னு அவசியமில்லை. ஆனால், அவ இருந்தா நல்லா இருக்கும். ஒரு நிமிஷம் கூவியிருந்தா எங்கதி என்னாயிருக்கும். 'எனக்குத் தெரியாது. நீ வெளியே போ'ன்னு கோபப்பட்டிருந்தா என்னாயிருக்கும்? பயந்து கத்தாத, வெளிய துரத்தாத அந்தப் பொண்ணு எவ்வளவு அழகா சுதாரிச்சது.
 
பிரச்சினைக்கு மிரளாத பொண்ணு எவ்வளவு பெரிய சந்தோஷம். எதுக்கெடுத்தாலும் அழுவாத பொண்ணு எவ்வளவு பெரிய நிம்மதி.
 
சரி, கிடைக்காட்டி என்ன? அவளுக்கு ஒரு நல்ல புருஷன் கிடைக்கட்டும். எனக்கும் அவள மாதிரி ஒரு நல்ல பொண்டாட்டி கிடைக்கட்டும்."
 
"உலகம் உருண்டை அதனால் தான் சந்தித்தவர்களையே மீண்டும் சந்தித்துக் கொள்கிறோம் என்பதான பழமொழியை கமலவல்லி கல்லூரியில் கேட்டிருக்கிறேன். ஆனால், நாமக்கல் டவுன் உருண்டையா என்று தெரியவில்லை. இன்று காலையிலிருந்து பிற்பகலுக்குள் ஏழாவது முறையாக இந்த மனிதனை சந்தித்தற்கு அர்த்தம் இந்த பழமொழியா என்று தெரியவில்லை. காலையில் வாசல் தெளிக்க போனபோது கொஞ்சம் கூடுதலான சத்தத்துடன் ஒரு மொபெட் தாண்டிப் போயிற்று. இருள் பிரியும் நேரத்தில் இந்த மனிதன் மின்விளக்கு எரிய பின்னே நிழலுருவாய் உட்கார்ந்து கொண்டு போனான். காய்கறிக்கு தெருமுனை கடைக்குப் போகும்போது காலையில் போன அதே வேகத்திலேயே திரும்ப வந்தான்............." 
 
ஒரு மலையாளிப் பெண்ணும் தமிழ் பிராமண பையனும் காதல் திருமணம் புரிந்துகொண்டால் எத்தனை சமூக எதிர்ப்பும், குடும்ப எதிர்ப்புகளையும் சந்திக்க நேரும் என்பதை கூடவே இருந்து பதிவு செய்தது போல எழுதியிருக்கிறார் ஆசிரியர். காதல் காலம் பல கடந்தாலும் சமூகத்தில்  இன்னும் முழுதாய் ஏற்றுகொள்ளாமல் மறைமுகமாக கொண்டாடும் ஒழுக்கமாக இருப்பது வேதனைக்குரியது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.                 
 
"ஏன் மிருகம் என்று மனிதனின் சில உணர்வுகளுக்கு பெயர் தரப்படுகிறது. மிருகமாகுதல் மட்டம் என்கிற விதமாய் பேசப்படுகிறது. ஆசைப்பட்ட பொருளை அடைவதுதான் மிருகத்தின் நோக்கமே ஒழிய, செய்முறைகள் பற்றி அதற்க்கு யோசனையே இல்லை. எதிர் கருத்து அறயும் சிந்தனை இல்லை."
 
"தன்மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு பிறர் மீதும் நம்பிக்கை இல்லை. நீ காதலிக்கப்பட வேண்டுமெனில் காதலிக்க வேண்டும். காதல் என்ன என்பது அறிய வேண்டும். காதல் என்பது மதித்தல், விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம், எந்த எதிர்பார்ப்புமின்றி தான் விரும்பிய வண்ணமே தன் சந்தொஷத்திர்கென்றே பிறர் வளைவர்கள் என்று எதிர்பார்ப்பதில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏமாற்றம் சினம் தரும், சினம் வஞ்சனை உருவாக்கும், வஞ்சனை பொய் சொல்லும், வன்முறை காட்டும், வன்முறை வன்முறையால் சந்திக்கப்படும். பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்."
 
"தன்னை அகௌவரவப்படுத்திக்கொள்வது காதலல்ல. தன்னைத்தானே ஹிம்சித்துக்கொள்வது நேசமல்ல. 
 
'Inidu, inidu, kaadal inidu’, a collection of short stories, forces us to recalibrate our view of romantic love.
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார். 
More Information
SKU Code TMN B 059
Weight in Kg 0.060000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:இனிது இனிது காதல் இனிது பாகம் -2 - பாலகுமாரன் - Inidhu Inidhu Kaadhal Inidhu 2 - Balakumaran - Inithu Inithu Kadhal Inithu Enidhu Enithu Paagam 2 Part 2 Kathal Kaathal

Similar Category Products