Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
TMN B 065
₹145.00
2 நாவல்கள்.
1.ஆனந்த யோகம்: ஆன்மீக புதினம், ஆன்மீக நாவல், சமய பக்தி சார்ந்த நாவல், தாயுமானவர் புராணம்.
2.தாஸி: முன்ஜென்மம் மற்றும் குடும்ப நாவல்.
காகித அட்டை;
248 பக்கங்கள்
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: ஏப்ரல், 1998;
மூன்றாம் பதிப்பு: ஏப்ரல், 2014.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
தாயுமானவர் புராணம். அனுப்பி கட்டிய மண்டபத் தூணில் தாயுமானவர் அயர்ந்து உட்கார, கண்மூடி வெறுமே கிடக்க, யாரோ அருகே நிற்பது போல் உணர்ந்தார். கண்திறக்க எதிரே யோகீஸ்வரர் நின்றிருந்தார். மெல்ல தாயுமானவரின் தலை வருடி ஆசீர்வதித்தார். பிடரியை நீவி விட்டார். தனது வலக்கையால் தாயுமானவரின் கழுத்து, புஜம், மார்பு எல்லாம் வருடிக் கொடுத்தார். விரல்களை சிறிது நேரம் கோர்த்துக் கொண்டார். தாயுமானவருக்கு வினோதமான உணர்வு ஏற்பட்டது. அவர் உடம்பு அவருக்கு அந்நியமாயிற்று. அவர் மனம் அவர் உடம்பை வேடிக்கைப் பார்த்தது. அவர் அவருடைய மனதை வேடிக்கைப் பார்த்தார். மனம் பார்ப்பதை நிறுத்தியது. அவரும் பார்ப்பதை நிறுத்தினார். மனம், உள்மனம் இரண்டும் வெளிற சடேரென்று ஆழமான வெறுமை தோன்றியது. அந்த வெறுமை வெளிச்சமாக இருந்தது. வெளிச்சத்தில் வெளிச்சமாய் கலந்தபோது எதுவும் செய்யத் தோன்றவில்லை. எந்த சிந்தனையும் எழவில்லை. மிக நிறைவான முழுமையான சந்தோஷம் தன்னைக் கேட்காமலேயே தன்னைக் கவ்விக் கொண்டதை உணர்ந்தார். அந்த சந்தோஷம்தான் அது. அதுதான் அவர். காலக்கணக்கு தப்பியது. நேரம் நினைவில் பதியாமல் போனது.இருட்டி வெகு நேரமான பிறகு யாரோ உலுக்க எழுந்தார்.
தாஸி: தாஸி என்பவள் இழிவானவள் அல்ல. அவள் ஆணுக்கு அடிமை அல்ல. அவள் போக வியாபாரி அல்ல. பெண் குலத்துக்கு தாஸமாய் இருப்பவள் தான் தாஸி. நொந்து போன பெண்களுக்கு உதவியாக இருப்பவள்தான் தாஸி. இப்போதும் அதேதான் செய்துகொண்டிருக்கிறாய். நீ செய்வது வெறும் சிங்காரித்து இல்லை. அது நம்பிக்கையூட்டல். மனம் நிமிர வைத்தல். சந்தோஷப்படுத்துதல். அதை மட்டுமே செய். திரும்பத் திரும்ப செய். வேறெதுவும் வேண்டாம்.
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
SKU Code | TMN B 065 |
---|---|
Weight in Kg | 0.100000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | திருமகள் நிலையம் Thirumagal Nilayam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%