பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் - பாலகுமாரன் - BAGHAVAN YOGI RAMSURATHKUMAR SARITHAM - Balakumaran - BHAGWAN YOKI RAM SURAT KUMAR SARIDHAM RAMSURATKUMAR RAMSURATKUMAAR
Store Review (4)
Book Type:
Hardbound
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
TMN B 111
₹200.00
வாழ்க்கை வரலாறு.
கடின அட்டை;
136 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: நவம்பர் 2012;
மூன்றாம் பதிப்பு: ஏப்ரல் 2016.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
ஒரு முன்னுரை
உலகம் இதைக் குறித்து தவித்துக் கொண்டிருக்கிறது என்று விசாரித்தால் ஒன்று தெரியவரும். வாழ்வு பற்றியும் வாழ்வுக்கு அப்பால் இருக்கின்ற வாழ்வு பற்றியும் உலகம் அயராது அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு இதைப் பற்றி அறிந்தவர்கள் தான் பதில் சொல்ல முடியும். இதைப் பற்றி அறிந்தவர்களுக்கு குரு என்று பெயர்.
கடவுளைப் பற்றி பேசுபவர்களுக்கு பிரசங்கிகள் என்று பெயர். பெரும்பான்மையான உபன்யாசிகள் கடவுளை அறிந்திலர்.
கடவுள் சிலைகளோடு இருப்பவர்களோ, மதத்தின் நியமங்களோடு இருப்பவர்களோ, மடத்தின் கட்டுப்பாடுகளோடு இருப்பவர்களோ கடவுளை அறிந்திருக்க முடியாது. இதுதான் கடவுள் என்று நின்றுவிட்டால், என் மதந்தான் உயர்வு என்று தீர்மானித்துவிட்டால் அது முட்டுச் சந்து. தேடித் தெரிந்து கொள்ள முடியாத நிலை. அடைபட்ட ஞான வாசல் - ஆனால் எல்லாம் அறிந்ததான அலட்டல் அங்கிருந்து தான் வரும்.
கடவுளை அறிந்தவருக்கு ஞானி என்று பெயர். ஒரு ஞானியே ஞானத்துக்கு வழிகாட்ட முடியும். அவர்தான் மிகச் சிறந்த குருவாக முடியும். சொற்களுக்கு அப்பால், ஹோமங்களுக்கு அப்பால், யோக சாதனைகளுக்கு அப்பால் பெரும் மௌனத்திற்கு உங்களைத் தள்ள முடியும்.
இந்த நூல் மௌன வாசலுக்கு உங்களை அழைத்துப் போகும் ஒரு குருவைப் பற்றியது. மௌனம் எளிதல்ல. குரு வழி எளிதல்ல. கடவுள் தேடல் சத்தியத்தோடு சேர்ந்தது என்பதை இந்த நூல் உணர்த்த முயற்சித்திருக்கிறது.
இந்த தேடலில் நீங்கள் தனி. குரு வழிகாட்டி. விழுந்து எழுந்து புரண்டு அடைய வேண்டிய அற்புதம் என்பதைச் சொல்வது.
சிவகாசியைச் சார்ந்த திரு.பார்த்தசாரதி அவர்களின் அமரகாவியம் என்கிற சிறிய புத்தகத்தைப் படித்து பரவசப்பட்டு அதிலிருந்த செய்திகளை எடுத்துக் கொண்டு அதற்கு என் வியப்புகளை விளக்கங்களை இந்நூலில் வெளியிட்டுருக்கிறேன்.
அதோடு என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர்களுடன் எனக்கேற்பட்ட அனுபவங்களை விலகி நின்று வேறு ஒரு கோணத்தில் ஆராய்ந்திருக்கிறேன்.
இது என் குரு யோகி ராம்சுரத் அவர்களை புகழ் பாடும் நூல். அதேசமயம் குறிவைத் தேடுவது என்பது ஒரு ஆனந்தம் என்பதை உங்களுக்கு உணர்த்தும் நூல்.
மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் இந்நூல் உருவாவதற்கு மிகவும் பக்கபலமாய் இருந்தது. 2012, பகவான் யோகிராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் இதை வெளியிட நேர்ந்திருக்கிறது.
எங்கள் எல்லா செயல்களுக்கும் துணை நிற்கும் எங்களை இயக்கம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு எங்கள் நன்றி. ஆன்மீக தளத்தில் அதாவது கடவுள் தேடலில் நாங்களும் முன்னேறி மற்றவரையும் உற்சாகப்படுத்துவது எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாயிற்று.
இதற்கும் அவரே காரணம். இந்நூலை திரும்பத் திரும்பப் படியுங்கள். சிறிது வெளிச்சம் வரும். பிறகு குருவின் அன்பு உங்களை அழைத்து செல்லும்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா.
என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன்.
----------------------
யோகி ராம்சுரத்குமார் இடையறாது கடவுள் தேடலில் ஈடுபட்டு வந்தார். கையில் காசு வைத்திருப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். யார் எது கேட்டாலும் கையிலிருப்பதை உடனடியாக கொடுத்து விடுகின்ற ஒரு மனப் பக்குவத்தில் இருந்தார்.
கடவுள் தேடலில் இருப்போருக்கு உடமைகள் என்று எதுவும் இல்லை. ஞானிக்கு எல்லார் கையும் தன் கையே! எல்லார் வயிறும் தன் வயிறே! வாசலில் நின்று யார் கையேந்தி தாயே பசிக்கிறது என்று குரல் கொடுத்தாலும் உடனடியாக தனது மனைவியை நோக்கி அவருக்கு உணவு கொடுக்கச் சொல்வார். குழந்தைகளுக்கான சமைத்த உணவு மட்டுமே உள்ளது என்றால், தனது உணவான பாலும் , பழமும் அந்த யாசகருக்கு கொடுத்து விட்டுத்தான் பட்டினியுடன் இருப்பார்.
இது கடவுள் தேடலின் பால் பிடித்த நிலையில் இருப்போருக்கு கருணை மிகுந்த ஒரு உள்ளமும், கனிவு மிகுந்த ஒரு நடவடிக்கையும் இருக்கும். யோகி ராம்சுரத்குமார் நன்கு கனிந்து இருந்தார்.
ஸ்வாமி ராமதாஸின், "In the Quest of God" ( கடவுளைத் தேடி ) புத்தகத்தைப் படித்தபோது ஸ்வாமி ராமதாஸ் பற்றிய அவரது எண்ணம் முற்றிலும் மாறிப்போனது. மிக நல்ல பதவியில் இருந்து, அதை உதறி வெறும் காலோடு பரத கண்டம் முழுதும் சுற்றி, பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டு, பல்வேறு சோதனைகளைத் தாண்டி தன்னைப் புடம் போட்டுக் கொண்ட பிறகே அவருக்கு கடவுள் தரிசனம் கிடைத்தது என்பதை அறிய, அவரை மீண்டும் தரிசிக்கின்ற ஆவல் ஏற்பட்டது.
அடுத்த ஒரு ஆகஸ்ட் மாதம் 1958 -ம் வருடம் ஆனந்தாஸ்ரமம் வந்தார். அங்கு தலைமைச் சீடர் ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமி இருந்தார். அவர் யோகியை மிக நல்ல முறையில் போற்றிப் பாதுகாத்து வந்தார். எனக்கு தீட்ஷை தருமாறு பப்பா ராமதாஸிடம் சொல்லுங்கள் என்று சச்சிதானந்தரிடம் வேண்ட, அதற்கு காலம் வரும், அதுவரை அவரையே பின்தொடர்ந்து இரு, நடக்கும் என்றார்.
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
SKU Code | TMN B 111 |
---|---|
Weight in Kg | 0.070000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | திருமகள் நிலையம் Thirumagal Nilayam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹140.00
Save: 20.00 Discount: 12.50%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%