பாதையில் பதிந்த அடிகள் - ராஜம் கிருஷ்ணன் - Pathaiyil Pathintha Adikal - Rajam Krishnan - Padhayil Padintha Pathayil Padhaiyil Patindha Adigal
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
வரலாறு.
காகித உறை/ பேப்பர்பேக்;
239 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த்து கிராப் வைத்துக்கொண்டார். வேட்டியும் ஜிப்பாவும் மேல்துண்டும் அணிந்து தனக்கொரு தனி அடையாளத்தை நிறுவிக் கொண்டார். சைக்கிளில் பயணித்தார். எதிரிகளைச் சமாளிக்க தற்காப்புக் கலைகளைக் கற்றார். இடதுசாரி இயக்கத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தினார். 1953ஆம் ஆண்டு எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி இறந்துபோன அவர் வரலாற்று நாயகியானார். மணலூர் மணியம்மாவைப் பற்றிக் கள ஆய்வு செய்து இந்த வாழ்க்கை வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். இடதுசாரி இயக்க வரலாற்றில் கவனம் பெறாமல்போன அந்த வீரப் பெண்மணியைப் பற்றிய ஒரே பதிவு என்ற வகையில் இந்தப் படைப்பு முக்கியமானது.
எழுத்தாளர் பற்றி : ராஜம் கிருஷ்ணன் (1925 - 2014) முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன், நாற்பது புதினங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள் என்றாலே குடும்பக் கதை எழுதுபவர்கள் என்ற பிம்பத்தை உடைத் தெறிந்தவர். கள ஆய்வு செய்து பல புதினங்களைப் படைத்தவர். குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர், பெண்கள், குழந்தைகள் இந்த அமைப்பில் சுரண்டப்படுவது குறித்து எழுதியிருக்கிறார். சாகித்திய அக்காதெமி விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது, சரஷ்வதி விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற இவரது படைப்புகள் ஜப்பானிய மொழி உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பெண் என்ற வகையில் குடும்ப அமைப்பின் நெருக்கடிகளைச் சமாளித்து அதிலேயே தன் அடையாளத்தை இழந்துபோகாமல் ஒரு இலக்கியவாதியாகத் தன்னை விரிவுபடுத்திக் கொண்டவர் ராஜம் கிருஷ்ணன். சமூக அக்கறையினால் விளைந்த படைப்பூக்கமும் கடுமையான உழைப்பும் இலக்கிய உலகில் இவரது இடத்தை உறுதிசெய்கின்றன.
SKU Code | Kch B 195 |
---|---|
Weight in Kg | 0.650000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9789382033417 |
Author Name | ராஜம் கிருஷ்ணன் - Rajam Krishnan |
Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Save: 25.00 Discount: 3.85%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Save: 30.00 Discount: 5.66%
உடையார் முதல் பாகம் - Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1
Save: 25.00 Discount: 5.88%
உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2
Save: 15.00 Discount: 3.53%
உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar
Save: 25.00 Discount: 4.76%