Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

உச்சித்திலகம் - UCHITHILAGAM - UCHITHILAKAM

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 127
₹255.00

2 நாவல்கள்.

1.உச்சித்திலகம் மற்றும்

இதிகாசம்/ புராணம்/ ராமாயணம் 

2.குங்குமத் தேர் 

குடும்ப நாவல்.

காகித அட்டை; 

264 பக்கங்கள்

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: ஜூன், 2000; 

மூன்றாம் பதிப்பு: ஜனவரி, 2015.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

உச்சித்திலகம்: இராமாயணத்தில் இது அனுமான் பற்றிய கதை.  இதில் அனுமன் நிதானமான முதிர்ச்சியான, வழிகாட்டியாக இருக்கிறார். வானரர்களை பற்றியும், ராமன் இலக்குவனை பற்றியும் சுவைபட கதை சொல்லி இருக்கிறார். குரங்கை அடக்க முடியாது, அனால் ஒரு குரங்கே மனம் என்னும் பெருங்குரங்கை அடக்கி ஆள்கிறது. 
 
சித்தப் புருஷர் ஜாம்பவான் பேச்சைக் கேட்டு இளவரசன் அங்கதன் திடுக்கிட்டான்.
 
"இந்த முறை படையெடுப்பிற்கு பேரரசர் வாலி வரவில்லை. ஏன் தெரியுமா. நமது படையின் லட்சணத்தை நீங்கள் முற்றிலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும், தனித்தனியே நீங்கள் அதை அடக்கி ஆள வேண்டுமென்பதே அவர் விருப்பம். பேரரசர் வாலிக்கு, உங்களை அரசப் பொறுப்பில் அமர்த்தும் ஆசை வந்து விட்டது.
 
"ஏன், என் தந்தைக்கென்ன. இளமையோடும் வலிமையோடும்தானே இருக்கிறார். இன்னமும் ஆண்டு அனுபவிக்கும் தெம்போடுதானே இருக்கிறார்."
 
"அங்கதரே, மரணம் என்பது இளமையோடும் வலிமையோடும் சம்பந்தப்பட்டது அல்ல. அது எவருக்கும் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்."
 
இளவரசன் அங்கதன் திடுக்கிட்டான்.
 
குங்குமத் தேர்: 
 
"துர்கா, நாம் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா? சதாசிவம் கேட்டான். 
 
"என்ன தப்பு?" அவனை இடதுகையால் அணைத்துக் கொண்டு, வலதுகையால் அவன் தலையைத் தடவிக் கொண்டு, அவ்வப்போது அவன் இதழ்களில் முத்தமிட்டுக் கொண்டு துர்காதேவி கேட்டாள்.
 
"நாம ஊரைவிட்டு வந்திருக்கக்கூடாதோ. இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாமோ. லண்டனுக்குப் போய் செட்டிலாயிட்டு அதுக்குப்பிறகு கல்யாணம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்குமோ?"
 
"ஏன் அப்படிக் கேட்கறீங்க?"
 
"நாய்படாத பாடு படுறோமே. எங்கேயோ, வீட்லயே உக்கார்ந்துட்டு, உக்கார்ந்தா சரியா, நின்னா சரியா திரும்பினா சரியா, பேசினா சரியான்னு ஒவ்வொன்னுத்தையும்  யோசனை பண்ணிக்கிட்டு இருக்கோமே."
 
"இருக்கட்டும். இதுவும் நல்லாதான் இருக்கு."
 
"என்ன நல்லா இருக்கு?"
 
"அன்னிக்கு அங்க லவ் இங்கேயும் 'கன்டினுயூ' ஆகுதே." அவள் சிரிப்போடு சொன்னாள்.
 
"எனக்குப் புரியலை துர்காதேவி."
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
More Information
SKU Code TMN B 127
Weight in Kg 0.070000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:உச்சித்திலகம் - UCHITHILAGAM - UCHITHILAKAM

Similar Category Products