Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மகாபாரதம் பாகம் 1 - Magabharatham 1 - Mahabaratham Part -1 -Maghabharatham 1 - Mahabharatham 1

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 154
Regular Price ₹540.00 Special Price ₹520.00

Save: 20.00 Discount: 3.70%

இந்திய இதிகாசம் / புராணம்.
 
கடின அட்டை / ஹார்ட் பௌண்ட்; 
530 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஜூன், 2016; 
மூன்றாம் பதிப்பு: பிப்ரவரி, 2021. 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

மஹாபாரதம் என்ன சொல்கிறது. யாருக்கு என்ன நோக்கம். இந்த மிகப் பெரிய யுத்தம் நடப்பதற்கு என்ன காரணம்  என்கிற அலசல்தான் இந்த இதிகாசத்தில் முக்கிய விஷயங்கள் என்று எனக்குப்பட்டது. அதை நிறைவேற்றியிருக்கிறேன். இந்த முதல் பாகம் எழுதியதும் மிகப் பெரிய ஆனந்தம் என்னுள் குடி கொண்டது. வழக்கம்போல் அல்லாது இந்த முறை என்னை நானே பாராட்டிக் கொண்டேன். நீங்கள் பாராட்டுவீர்கள் என்று நிச்சயம் நம்புகிறேன். 
 
தர்மத்தை சொல்ல இன்றைய நிலையில் இதிகாசங்கள்தான் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வேத வியாக்கியானங்கள் மனதில் தைக்க, உணர முடியா கனமாக போய்விட்டன. குழைத்து கொடுத்த இதிகாசம் ஓரளவு ஜீரணம் செய்ய முடிகிறது. இராமாயணமும் மகாபாரதமும் ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியவை. இந்த காப்பியங்கள் எல்லா இடத்து மக்களின் நல்லது, கெட்டதுகளை வெகு துல்லியமாக காட்டுகிறது. ஏமாற்றுபவரும், பொய் சொல்பவரும், சத்தியம் தவறாதவரும், தான தர்மம் செய்பவரும், எல்லா இடத்திலும், எல்லா வகுப்பிலும் இருக்கின்றார்கள். இந்த இதிகாசங்கள் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறது. நமக்கு பார்க்க கற்றுக் கொடுக்கிறது.
 
இதிகாசப் புராணங்களை நாம் தோளில் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும். இது நம் வாழ்நாள் கடமை. இதை மறுத்தவருக்கு வாழ்க்கை புரியவில்லை என்பதே அர்த்தம். இந்த முதல் பாகம் தொடர்ந்து மற்ற பாகத்தையும் வேகமாக கொடுப்பதற்கு முயற்சி செய்வேன். 
 
குரு காப்பார். 
 
நமஸ்காரம். 
 
- என்றென்றும் அன்புடன் பாலகுமாரன் ஜூன் 2016.
 
'உங்களுக்கு நன் ஒரு கதை சொல்லட்டுமா'. பாரத கண்டத்தின் மிகச் சிறந்த காவியம் இப்படித்தான் துவங்குகிறது. "உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா?" 
 
சூதர் என்ற முனிவர், நைமிசாரண்யம் என்ற இடத்தில் சௌனகர் என்ற ரிஷி மிகப் பெரிய யாகம் செய்து கொண்டிருந்த போது, அன்றைய யாகத்தை முடித்துவிட்டு மற்ற எல்லா ரிஷிகளும் ஓய்வாக அமர்ந்திருந்தபோது அவர்களுக்கு நடுவே வந்து நின்று பேச ஆரம்பித்தார். "உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா."
 
பரதகண்டம்  கதை சொல்லிகளின் உலகம். தர்மத்தை அழுத்தமான வாக்கியங்களாக சொல்லியிருப்பினும் வேத விஷயமாக போற்றியிருப்பினும் எல்லோருக்கும் மனதில் பதியும் வண்ணம் அந்த தர்மத்தை கதைகளின் மூலம் சொன்னார்கள். இதிகாசம் என்றால் எங்கோ என்றோ நடந்தது என்று அர்த்தம். ஆக, இது வெறும் கற்பனை கதையாக இல்லாது ஏதோ ஒரு காலத்தில் எங்கோ சில மனிதர்களுடைய நடவடிக்கையால் ஏற்பட்ட விஷயங்கள் என்பதால் செய்திகள் தெள்ளத்தெளிவாக மனதில் பதிகின்றன.
More Information
SKU Code TMN B 154
Weight in Kg 0.070000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM
Write Your Own Review
You're reviewing:மகாபாரதம் பாகம் 1 - Magabharatham 1 - Mahabaratham Part -1 -Maghabharatham 1 - Mahabharatham 1

Similar Category Products