Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri B 079
₹24.00

ஆன்மிகம்.

காகித உறை;

112 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் மணிமொழிகள், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அறிவே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்பது திருமந்திரம். அறிவுடையார் எல்லாம் உடையார் என்பார் தெய்வப் புலவர். அறிவு ஆழ்ந்து அகன்று நுணுகி விளங்கும். ஆழ்ந்தகன்ற நுண்ணியனே என்பார் மாணிக்கவாசகர். அறிவு ஆழத்தில் அமைந்துள்ளது. அறிவையடையதுவே இன்பப்பேறு ஆகும். கடலில் மேலோடு நோக்கினால் அலைகள் தெரியும். சிறிது ஆழத்தில் சென்றால் மீன்கள் கிடைக்கும். இன்னுஞ் சிறிது ஆழத்தில் நத்தையும், சங்கும் கிடைக்கும். மிகுந்த ஆழத்தில் சென்றால் முத்துக்கள் கிடைக்கும். அம்முத்துக்களில் சிறந்தது ஆணிமுத்து. அதுபோல், கலையறிவினாலும் அநுபவ அறிவினாலும் நுணுகி எடுத்த மணிமொழிகளை ஒருங்கு சேர்த்து அன்பர்கள் அறிவுக்கு விருந்தாக எந்தை கந்தவேள் திருவருளால் வெளியிடுகின்றேன். உலகம் இதனை ஓதியுணர்ந்து உய்வு பெறுக. அன்பனே! இறைவன் உருவம், நாமம், குணம், குறி யாவும் இல்லாத பரம்பொருள், ஆனால் அப்பரமபதி உயிர்களை உய்விக்கும் பொருட்டு அருளுருத் தாங்குகின்றான். கருணைதான் அவனுடைய வடிவம். தண்ணீர் அதிகமாகக் குளிர்ந்த போது கட்டியாக (ஐஸ்) ஆகின்றது. மீண்டும் அது தண்ணீராகக் கரைந்து விடும். அதுபோல் கருணையின் மிகுதியால் இறைவன் எல்லையற்ற அருளேயொரு திருமேனியாகக் கொள்கின்றான்; அவ் வடிவம் மாயா சம்பந்தமானதன்று. ஏழுதாதுக்களாலானதன்று.

எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

More Information
SKU Code Guhashri B 079
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar
Publisher Name குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar
Write Your Own Review
You're reviewing:மணிமொழிகள் - Manimoligal - Manimozhigal

Similar Category Products





Other Books by திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar