பிள்ளையார் பெருமை - திருமுருக கிருபானந்த வாரியார் - Pillaiyaar Perumai
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
VAN B 329
₹55.00
ஆன்மீகம் நூல்.
பேப்பர்பேக்;
134 பக்கங்கள்;
பதிநான்காம் பதிப்பு: டிசம்பர் 2018;
மொழி: தமிழ்;
வானதி பதிப்பகம்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are Inclusive of Tax.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் பிள்ளையார் பெருமை, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
முன்னுரை:
ஓம் என்ற பிரணவத்தின் இருந்து வேதங்கள் தோன்றின. அப் பிரணவமே எல்லாத் தேவதைகட்கும் பிறப்பிடம், உலகத்தின் தோற்றத்துக்கும், ஒடுக்கத்துக்கும், பிரணவ மந்திரமே காரணமாகும். பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.
இத்தகைய வித்தக விநாயகரின் உருவமும் பெரிது. அவருடைய மகிமையும் பெரிது; அவர் புரியும் கருணையும் பெரிது; எல்லாம் பெரிது எனவுணர்க.
நேரிசை வெண்பா
உருவம் பெரிததனில் உள்ளம் பெரிது
ஒருநல் வரமும் பெரிதே - பருவமதில்
பெய்யும் மழைபோல் பெய்கருணை தான்பெரிதால்
ஐய! பெரிதுன் அருள்.
மேலான மூலாதார மூர்த்தி - முழுமுதற் பொருள் விநாயகர், அவரை வழிபட்டால் எல்லாக் கருமங்களும் எளிதில் முடியும். அவர் கருணைக் கடல், கிருபாநிதி, தயானந்தம்.
விநாயகருடைய பெருமையை கோகுலம் என்ற வெளியீட்டில் தொடராக எழுதினேன். அதனைத் திரட்டி, வானதி பதிப்பக அதிபர் - என் அன்பார் திருநாவுக்கரசு அவர்கள் தனி நூலாக வெளியிடுகின்றார். திருநாவுக்கரசு அவர்கள் ஒரு சிறந்த அன்பர். மக்களிடையே இனிய பண்புகள் பரவ வேண்டும் என்ற பெருநோக்கம் உடையவர்.
'பிள்ளையார் பெருமை" என்ற இந்நூலை அழகாக படங்களுடன் அச்சிட்டுத் தமிழகத்துக்கு வழங்குகின்றார். வானோரும் போற்றும் இந்நூலை ஏனோரும் படித்துப் பயன் பெறுவார்களாக.
வாழ்க அடியார்கள். வானதிப் பதிப்பகம் ஓங்குக; வெல்க இறையருள்.
அன்பன்
கிருபானந்தவாரி
கோபிசெட்டிபாளையம்
13-9-76.
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
SKU Code | VAN B 329 |
---|---|
Weight in Kg | 0.520000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%